Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

இந்தோனோஷியாவில் 300 முதலைகளை கொன்று குவித்த கிராம மக்கள்

சக மனிதரை கொன்றதற்காக இந்தோனோஷியாவில் 300 முதலைகளை உள்ளூர் மக்கள் கொன்று குவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனோஷியாவின் பப்புவா என்ற மாகாணத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புல் வெட்டிக்கொண்டிருந்த 48 வயதான நபரை முதலைகள் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. புல் வெட்டிக்கொண்டிருந்த இவர் அங்கிருந்த பெரிய முதலை பண்ணையில் விழுந்துள்ளார். பின்பு அங்கிருந்த முதலைகள் அவரை கடித்து தின்றுவிட்டது.

குடியிருப்பு பகுதியில் அமைந்திருக்கும் இந்த முதலை பண்ணையை அகற்ற கோரி ஏற்கனவே உள்ளூர் மக்கள் வலியுறுத்தி வந்த நிலையில் தற்போது சக மனிதரை முதலைகள் கொன்றதால் உள்ளூர் வாசிகள் ஆத்திரமடைந்துள்ளனர். இதனால் காரியம் முடிந்த கையோடு அரிவாள் கோடாரியுடன் சென்று முதலை பண்ணையில் இருந்த 300 முதலைகளையும் சரமாரியாக வெட்டி சாய்த்துள்ளனர்.

ஏற்கனவே உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு இழப்பீடு தருவதாக கூறி பண்ணை அதிகாரிகள் உள்ளூர் மக்களை சமாதானப்படுத்தியுள்ளனர். ஆனால் சக மனிதர் உயிரிழந்ததை தாங்க முடியாத உள்ளூர் வாசிகள் முதலை குட்டிகளை கூட விட்டுவைக்காமல் சரமாரியாக வெட்டி சாய்த்துள்ளனர். இதனை அடுத்து பண்ணை அதிகாரிகள் காவல் நிலையத்தில் உள்ளூர் வாசிகள் மீது புகார் அளித்துள்ளார். இது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தோனோஷியாவில் 300 முதலைகளை கொன்று குவித்த கிராம மக்கள்