Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடிப்பு

தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடிப்பு

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த 9 மீனவர்கள் ராமநாதபுரம் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். இதனை அடுத்து அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக சிறைபிடித்தனர். புதுக்கோட்டை ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த சந்திரபோஸ், தெய்வகுமார், வினோத், பிரவின், குகன், விஜயேந்திரன் ஆகியோர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினர் அங்கு வந்த போது மீனவர்களுக்கும் கடற்படையினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதனை அடுத்து இலங்கை கடற்படையினர் மீனவர்களின் வலைகளை அறுத்துவிட்டு அவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக சிறைபிடித்தனர். மீனவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடிப்பு