Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

மோடியையும் எடப்பாடி பழனிசாமியையும் விமர்சித்து பாடியதாக திருச்சியை சேர்ந்த கோவன் கைது

திருச்சியில் பிரபல பாடகரான கோவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மக்கள் கலை இலக்கிய கழகத்தை சேர்ந்த கோவன் என்பவர், சாதி, அரசியல், மணல் கொள்ளைகள் உள்ளிட்ட பல சமூக பிரச்சனைகளுக்கு எதிராக பல பாடல்களை எழுதி பாடி வருகிறார். இந்நிலையில் இன்று திருச்சியில் கேகே நகர் காவல் அதிகாரிகள் பாடகர் கோவனை கைது செய்துள்ளனர். காவல் ஆய்வாளர் சிவசுப்ரமணியம் தலைமையில் இந்த கைது நடந்துள்ளது. இதனால் பதறிப்போன கோவனின் உறவினர்கள், காவல் அதிகாரிகளிடம் கைதுக்கான காரணத்தை கேட்டபோது அதற்கு போலீசார் பதிலளிக்கவில்லை.

தற்போது பாடகரான கோவனை திருச்சி கேகே நகர் காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். சமீபத்தில் கோவன், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்தும், ரத யாத்திரை பற்றியும் பாடல்களை பாடியுள்ளார். இந்த பாடல்களில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை விமர்சித்து பாடியதாக கேகே நகர் போலீசார் கைது செய்துள்ளனர். முன்னதாக டாஸ்மாக் எதிராக 'மூடு டாஸ்மாக்கை மூடு' என்ற பாடலுக்காக கோவன் கைது செய்யப்பட்டுள்ளார். 

மோடியையும் எடப்பாடி பழனிசாமியையும் விமர்சித்து பாடியதாக திருச்சியை சேர்ந்த கோவன் கைது