Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

அண்ணனுடன் இணைந்து நடிக்க தயார் - கார்த்தி

அண்ணனுடன் இணைந்து நடிக்க தயார் - கார்த்தி

நடிகர் கார்த்தி நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் 'தீரன் அதிகாரம் ஒன்று'. இந்த படத்தை வினோத் இயக்கியுள்ளார். இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்ச்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்திற்கு கிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கார்த்தி, ரகுல் பிரீத் சிங் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் கார்த்தி பேசியபோது "சினிமாவில் கதைக்குத்தான் முக்கியத்துவம். நல்ல கதையாக இருந்தால்தான் ரசிகர்கள் பார்க்க செல்வார்கள். அதனால் தான் நல்ல கதைக்கும் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்வு செய்கிறேன். 'பருத்தி வீரன்' படத்திற்கு பின் எனக்கு வாய்ந்த ஒவ்வொரு படமும் அப்படிதான் இருந்தது. ஒவ்வொரு படமும் எனக்கு வித்தியாசமான அனுபவத்தை தந்தது. நான் மகான் அல்ல, சிறுத்தை, காஷ்மோரா போன்ற படங்கள் எனக்கு வேறொரு பரிணாமத்தை கொடுத்தது. மேலும் 'தங்கல்' மற்றும் 'பாகுபலி' போன்ற படங்களை பார்த்து இந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை உள்ளது. 

தற்போது திரைக்கு வரவுள்ள 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் போலீஸ் அதிகாரியாக வருகிறேன். போலீசார் காவல் பணிக்கு ஈடுபடுவது, ரோந்து செல்வது இதையெல்லாம் தவிர்த்து போலீஸ் அதிகாரியின் வாழ்க்கையை பற்றி பேசும் படம் தான் இது. இந்த படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது. 'சதுரங்கம்' பட இயக்குனர் வினோத் இந்த படத்தை இயக்கியுள்ளார். அதிரடி படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் 'ஆர்கானிக்' உடைகளை பயன்படுத்தியுள்ளோம். அண்ணன் சூர்யாவுடன் இணைந்து நடிக்க தயாராக உள்ளேன். நல்ல கதையாக அமைந்தால் நிச்சயம் இருவரும் இணைந்து நடிப்போம்." என்று அவர் தெரிவித்துள்ளார்.

அண்ணனுடன் இணைந்து நடிக்க தயார் - கார்த்தி