Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

ராணி பத்மினியாக இருந்து பொறுக்கியாக மாறிய தீபிகா படுகோனே

actress deepika padukone new movie titled as raani

நடிகர் தீபிகா படுகோனே நடிப்பில் 'பத்மாவத்' படம் வெளியாகியுள்ளது. இந்த படம் தற்போது வரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. இந்த படத்தில் தீபிகா படுகோனே ராணி பத்மினி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ளார். இந்த படத்தை மிகுந்த போராட்டங்களுக்கும், எதிர்ப்புகளுக்கு மத்தியில் படக்குழு வெளியிட்டது.

படக்குழுவின் முயற்சிக்கு பலனாக இந்த படம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது. இதனை தொடர்ந்து நடிகை தீபிகா படுகோனேவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படம் ரவுடி கும்பலுக்கும் மாபியா கொள்ளைக்கார கூட்டத்திற்கும் சிம்ம சொப்பனமாக விளங்கிய தலைவி 'சப்னா திதி' என்பவரின் வாழ்க்கை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக உள்ளது.

இந்த படத்தில் தீபிகா படுகோனே சப்னா திதி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இதனால் தீபிகா படுகோனே இந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தனது குரலையும் உடல் எடையையும் கம்பீரமாக தயார்படுத்தி வருகிறார். மேலும் இந்த படத்தில் சப்னா திதி கணவராக 'காலியா' கதாபாத்திரத்தில் நடிகர் இர்பான் கான் நடிக்க உள்ளார். முன்னதாக இர்பான் கான் மற்றும் தீபிகா படுகோனே ஆகியோரது நடிப்பில் 'பிகு' என்ற படம் வெளியானது.

இதனை தொடர்ந்து இரண்டாவது முறையாக இர்பான் கான், தீபிகா படுகோனே இணைந்துள்ளனர். இந்த படத்தை இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளரான விஷால் பரத்வாஜ் இயக்க உள்ளார். இவருடைய கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தில் முன்னதாக இந்தியில் 'ரங்கூன்' படம் வெளியானது.

விரைவில் இவருடைய இசையமைப்பில் நடிகர் அஜய் தேவ்கனின் 'ரெய்டு' படம் வெளியாகவுள்ளது. மேலும் நடிகர் இர்பான் கான் மற்றும் விஷால் பரத்வாஜ் ஆகியோர் இணையில் 'மாஃபூல் (Maaqbool)' மற்றும் 'சாட் கூன் மாப் (Saat Khoon Maaf)' போன்ற படங்கள் வெளியானது. இதனை தொடர்ந்து தற்போது தீபிகா படுகோனே நடிக்கும் புது படத்தில் இணைந்துள்ளனர்.

நடிகை தீபிகா படுகோனே 'பத்மாவத்' படத்தை அடுத்து ரவுடியாக களமிறங்கியுள்ள இந்த படத்திற்கு 'ராணி' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் மார்ச்சில் தொடங்கவுள்ளது. மேலும் இந்த படத்தை அக்டோபர் மாதம் வெளியிட உள்ளதாக படக்குழு முடிவு செய்துள்ளது. இந்த படத்தின் மூலம் ராணியாக பார்த்த தீபிகா படுகோனேவை பொறுக்கியாக ரசிகர்கள் காண உள்ளனர்.

ராணி பத்மினியாக இருந்து பொறுக்கியாக மாறிய தீபிகா படுகோனே