Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

காற்றின் மொழி படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகும் ஏஆர் ரஹ்மான் மருமகன்

இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் மருமகனான AH காசிப் திரைத்துறையில் இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார்.

உப்பு கருவாடு, பிருந்தாவனம் போன்ற படங்களுக்கு பிறகு இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி வரும் படம் 'காற்றின் மொழி'. தும்ஹரி சுலு என்ற படத்தின் ரீமேக் படமான இந்த படத்தில் நடிகை ஜோதிகா வித்யா பாலன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் டைட்டிலை படக்குழு அறிவித்தது. இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தில் இசையமைப்பாளராக இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் மருமகன் AH காஷிஃப் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.  

ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரஹ்மானின் மருமகனான AH காஷிஃப், கடந்த பிப்ரவரி 14 காதலர் தினத்தில் 'காதல்' என்ற தலைப்பில் ஒரு ஆல்பம் பாடலை வெளியிட்டார். இந்த பாடலை சித் ஸ்ரீராம் மற்றும் ஜோனிதா காந்தி ஆகியோர் பாடியிருந்தனர். இந்த பாடலுக்கு முன்னதாக இவருடைய இசையமைப்பில் 'போ போ என்' என்ற பாடல் வெளிவந்து மக்களிடம் நல்ல வரவேற்பைனை பெற்று வந்தது. இதனை அடுத்து தற்போது இவர் நடிகை ஜோதிகாவின் 'காற்றின் மொழி' படத்தின் மூலம் இசையமைப்பாளராக திரைத்துறையில் அறிமுகமாகவுள்ளார்.

35 வயதினை கடந்தாலும் திரைத்துறையில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் ஜோதிகா. 36 வயதினிலே, மகளிர் மட்டும், நாச்சியார் என புது புது வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். இதனால் தற்போது ரசிகர்களிடம் ஜோதிகாவுக்கு மீண்டும் வரவேற்புகள் குவிந்து வருகிறது. ரசிகர்களின் பலத்த வரவெற்பிற்கேற்ப இவர் நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். நாச்சியார் படத்திற்கு பிறகு உருவாகவுள்ள இந்த படத்தில் 'மொழி' படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக மீண்டும் ராதா மோகன் இயக்கத்தில் நடித்து வருகிறார். பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக உருவாகவுள்ள இந்த படத்தில் நடிகர் விதார்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

காற்றின் மொழி படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகும் ஏஆர் ரஹ்மான் மருமகன்