Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

இரும்புத்திரை படத்தை பாராட்டிய மகேஷ் பாபு

தமிழில் வெளியான இரும்புத்திரை தற்போது தெலுங்கிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் தெலுங்கு முன்னணி நடிகர் மகேஷ் பாபு இந்த படத்தை பாராட்டியுள்ளார்.

நடிகர் மற்றும் தயாரிப்பாளரான விஷால் நடிப்பில் கடந்த மாதம் வெளியாகி தற்போது வரை வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் படம் 'இரும்பு திரை'. அறிமுக இயக்குனரான பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்த படம் ரசிகர்களிடம் பேராதரவை பெற்று வருகிறது. தற்போதுள்ள டிஜிட்டல் உலகின் அபாயங்களை மக்களுக்கு எடுத்துரைக்கும் படமாக வெளியாகியுள்ள இந்த படம் நல்ல வசூலையும் படைத்து வருகிறது.

யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் ஆக்சன் கிங் வில்லனாக நடித்துள்ள இந்த படம் தற்போது தெலுங்கிலும் 'அபிமன்யுடு' என்ற தலைப்பிலும் வெளியாகியுள்ளது. நல்ல படங்களுக்கு எப்போதுமே திரையுலகில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் தெலுங்கில் வெளியாகியுள்ள இந்த படத்திற்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில் தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபு, இந்த படத்தையும், படக்குழுவினரையும் பாராட்டி டிவிட்டரில் பதிவு செய்துள்ளார். அவருடைய டிவிட்டரில் "அபிமன்யுடு படம் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. இயக்குனர் பிஎஸ் மித்ரன் அவருடைய திறமையை தன்னுடைய இயக்கத்தில் நிரூபித்துள்ளார். நல்ல தரமான படத்தை கொடுத்துள்ள படக்குழுவினருக்கு எனது மனதார பாராட்டுக்கள்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

இரும்புத்திரை படத்தை பாராட்டிய மகேஷ் பாபு