Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

நாச்சியார் சர்ச்சையால் பாலா ஜோதிகா மீது வழக்கு பதிவு

naachiar movie issues

பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜிவி.பிரகாஷ், ரோக்லின் வெங்கடேஷ் என சிலர் நடித்து உருவாகியுள்ள 'நாச்சியார்' படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்பு நடிகர் சூர்யா வெளியிட்டிருந்தார். இந்த டீசர் இறுதியில் ஜோதிகா பேசிய ஒற்றை வார்த்தைக்கு பலரும் எதிப்புகள் தெரிவித்து வருகின்றனர். மேலும் சமூக வலைத்தளங்களிலும் இந்த வார்த்தைக்காக ஒரு பெரிய பூகம்பமே வெடித்தது.      

இந்நிலையில் நாச்சியார் டீசரில் இடம் பெற்றுள்ள சர்சைக்குரிய வசனத்தின் காரணத்தினால் இயக்குனர் பாலா, நடிகை ஜோதிகா இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி ராஜன் என்பவர் மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் ''நாச்சியார் படத்தின் டீசரில் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக ஜோதிகாவின் வசனம் இடம் பெற்றிருக்கிறது'' என்று   தெரிவித்திருந்தார்.  மேலும் இந்த மனுவின் விசாரணை வருகிற 28ம் தேதி நடைபெற இருக்கிறது.  

    

நாச்சியார் சர்ச்சையால் பாலா ஜோதிகா மீது வழக்கு பதிவு