Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

சங்கராந்தியில் புதுப்படத்தை தொடங்கவிருக்கும் ராஜமௌலி

rajamouli new movie

பாகுபலி, பாகுபலி 2 படத்தின் மூலம் ரசிகர்கள், விமர்சனங்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது. இதன் காரணத்தினால் ராஜமௌலியின் அடுத்த படத்திற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தெலுங்கு திரையுலக சூப்பர் ஸ்டார்கள் ஜூனியர் என்டி. ராமா ராவ், ராம்சரன் இருவரையும் இணைத்து படங்கள் எடுப்பதாக தகவல்கள் வெளிவந்திருந்தது.

 ராஜமௌலி படங்கள் என்றாலே அவரின் தந்தை விஜயேந்திர பிரசாத் தான் கதை எழுதுவார்.அது போன்று இந்த புதிய படத்திற்கும் அவரின் தந்தை தான் கதை எழுதியுள்ளார். தற்பொழுது ஸ்கிரிப்ட் பணிகளை முடிக்கும் தருணத்தில் உள்ளனர். இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதத்தில் சங்கராந்தி   அன்று  துவங்கவிருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.  

பாகுபலி படத்தினை போன்று மூன்று மொழிகளிலும் உருவாக உள்ள இப்படத்தில் அந்ததந்த மொழிகளில் பிரபலமானவர்களை நாயகனாக வைத்து படத்தினை எடுப்பதற்கு ராஜமௌலி முடிவு செய்திருப்பதாகவும், குத்துசண்டையை மையப்படுத்தி எடுப்பதாகவும், படத்திற்கு 'யமதீரா' என்று தலைப்பினை வைத்திருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளது. இந்த படத்தின் சம்மந்த பட்ட அதிகார பூர்வ அறிவிப்பு விரைவில் படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.     

சங்கராந்தியில் புதுப்படத்தை தொடங்கவிருக்கும் ராஜமௌலி