Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

மீண்டும் ரஜினிகாந்த் கேஎஸ் ரவிக்குமார் கூட்டணியில் உருவாகும் படையப்பா இரண்டாம் பாகம்

லிங்கா படத்திற்கு பிறகு மீண்டும் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் படையப்பா இரண்டாம் பாகத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார்.

முத்து படத்தின் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த், இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் கூட்டணியில் கடந்த 1999ஆம் ஆண்டில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த படம் 'படையப்பா'. இந்த படம் வெளியாகி 19 வருடங்களாகி விட்ட நிலையில் இன்றளவும் படையப்பாவாக ரஜினியும், நீலாம்பரியாக ரம்யா கிருஷ்ணாவும் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளனர்.

இந்த படம் தமிழ்நாடு, பிலிம்பேர் போன்ற பல விருதுகளை குவித்ததுடன் உலகம் முழுவதும் 210 பிரிண்டுகளுடன் வெளியான ஒரே தமிழ் படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் வெளியான இந்த படத்தில் சிவாஜி கணேசன், ரஜினி, ரம்யா கிருஷ்ணன், சவுந்தர்யா, ராதாரவி, செந்தில், நாசர் உள்ளிட்ட திரை பட்டாளமே இந்த படத்தில் நடித்திருந்தனர்.

தமிழ் சினிமாவில் வசூல் சாதனை படைத்த பிளாக் பஸ்டர் படமான இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் தற்போது முடிவு செய்துள்ளார். இதன் மூலம் முத்து, படையப்பா, லிங்கா படங்களுக்கு பிறகு மீண்டும் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் நான்காவது முறையாக ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். தற்போது ரஜினிகாந்த், கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வரும் புதுப்படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு கேஎஸ் ரவிக்குமார் இயக்க உள்ள 'படையப்பா' இரண்டாம் பாகத்தில் இணைய உள்ளார். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை விரைவில் படக்குழு வெளியிட உள்ளது. 

மீண்டும் ரஜினிகாந்த் கேஎஸ் ரவிக்குமார் கூட்டணியில் உருவாகும் படையப்பா இரண்டாம் பாகம்