Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

காற்றின் மொழி படத்தின் மூலம் ஜோதிகாவுடன் மீண்டும் இணைந்துள்ள சிம்பு

ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் காற்றின் மொழி படத்தில் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

10 வருடங்களுக்கு பிறகு இயக்குனர் ராதா மோகன் மற்றும் ஜோதிகா கூட்டணியில் உருவாகி வரும் படம் 'காற்றின் மொழி'. கடந்த ஆண்டு இந்தியில் வித்யா பாலன் நடிப்பில் வெளியான 'தும்ஹரி சுலு' படத்தின் ரீமேக் படமான இந்த படத்தில் ஜோதிகா ரேடியோ ஜாக்கி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ஜோதிகாவுடன் இணைந்து விதார்த், மஞ்சு லட்சுமி, மனோபாலா, எம்எஸ் பாஸ்கர், மோகன் ராமன் ஆகியோர் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க சிம்பு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே சிம்பு, ஜோதிகாவுடன் இணைந்து மன்மதன், சரவணா போன்ற படங்களில் நடித்துள்ள நிலையில் மீண்டும் ஜோதிகாவுடன் இணைந்து நடிக்க உள்ளார். மேலும் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் மல்டி ஸ்டார் படமான 'செக்க சிவந்த வானம்' படத்திலும் சிம்பு ஜோதிகா ஆகியோர் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு பிறகு நான்காவதாக 'காற்றின் மொழி' படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர்.

செக்க சிவந்த வானம் படப்பிடிப்பின் போது ஜோதிகா சிம்புவிடம் தான் நடித்து வரும் காற்றின் மொழி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க சம்மதம் கேட்டாராம். அதற்கு சிம்புவும் தயங்காமல் சம்மதம் தெரிவித்துள்ளாராம். தயாரிப்பாளர் தனஞ்செயன் தனது போப்ட்டா நிறுவனம் சார்பில் தயாரித்து வரும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மானின் மருமகன் AH காசிப் இசையமைத்து வருகிறார்.

காற்றின் மொழி படத்தின் மூலம் ஜோதிகாவுடன் மீண்டும் இணைந்துள்ள சிம்பு