Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

நைஜீரியாவில் உள்ள மசூதியில் தற்கொலை படை தாக்குதல்

nigeria suicide bomb attack

நைஜீரியாவில் முஸ்லீம்களும் கிறுஸ்துவர்களும் சரி சமமாக உள்ளனர். அங்கு இஸ்லாமிய ஹரியட் ஆட்சியை அமல்படுத்தக்கோரி போக்கோ ஹரம் தீவிரவாதிகள் பல்வேறு நாச வேளைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை அடுத்து தற்போது நைஜீரியாவின் வடக்கு பகுதியில் உள்ள அடமாவா மாநிலத்தின் முபி நகரில் உள்ள ஒரு மசூதியில் இன்று புகுந்த போக்கோ ஹரம் தீவிரவாதிகள் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்க வைத்துள்ளனர். 

இந்த கோர சம்பவத்தில் 50-க்கும் அதிகமானவர்கள் பலியானதாகவும் ஏராளமானோர் காயமடைந்ததாகவும் அடமாவா மாநில செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் படு காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்க பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்தவர்களில் பலரது உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின்றன.

நைஜீரியாவில் உள்ள மசூதியில் தற்கொலை படை தாக்குதல்