ads

வேலூர் மாணவன் தற்கொலைக்கு நீதி வேண்டி நடிகர் சத்யராஜ் பா.ரஞ்சித் ஆர்ப்பாட்டம்

sathyaraj and director pa ranjith demonstration

sathyaraj and director pa ranjith demonstration

 சமீபத்தில் ஓவிய கல்லூரி மாணவர் பிரகாஷ் தற்கொலை செய்துகொண்டார். இந்த மாணவர் மதம் மாறியதால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மாணவன் தற்கொலைக்கு நீதி கேட்டு கண்டன கூட்டம் நடைபெற்றுள்ளது. தற்கொலை செய்து கொண்ட மாணவர் பிரகாஷ் வரைந்த ஓவியங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் நடிகர் சத்யராஜ், இயக்குனர் பா.ரஞ்சித், தொல் திருமாவளவன், ராஜூமுருகன், வீரபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் நடிகர் சத்யராஜ் மற்றும் இயக்குனர் பா.ரஞ்சித் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். 

அதில் "சென்னையில் உள்ள கவின் ஓவிய கல்லூரி மாணவர் ரஞ்சித் மதம் மாறியுள்ளார். மாணவரின் மதமாற்றத்தை எதிர்த்து ஆசிரியர் கண்டித்துள்ளனர். இதனால் மனம் உடைந்த மாணவர் பிரகாஷ் வேலூரில் அக்டோபர் 25-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த தற்கொலை தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. மாணவர்கள் பிரச்சினை என்றால் உயிரை மாய்த்து கொள்ள வேண்டாம். உங்களுக்காக நாங்கள் போராடுவோம். மாணவர் பிரகாஷுக்கு நீதி கிடைக்க வேண்டும், இல்லையென்றால் வேலூரில் வருகிற 28-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவோம். " என்று தெரிவித்தனர்.

வேலூர் மாணவன் தற்கொலைக்கு நீதி வேண்டி நடிகர் சத்யராஜ் பா.ரஞ்சித் ஆர்ப்பாட்டம்