ads

நான் தான் ஜெயலலிதாவின் உண்மையான மகள் - பெங்களூரு பெண் அம்ருதா

jeyalalitha daughter

jeyalalitha daughter

 மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உண்மையான வாரிசுகள் என ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா மற்றும் தீபக் ஆகியோர் உரிமை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்த அம்ருதா (வயது 37), நான்தான் ஜெயலலிதாவின் மகள் என உரிமை கோரி சுப்ரிம் கோர்ட் தலைமை நீதிபதி, பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் ஜெயலலிதா மகள் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

 இதில் "என்னை ஜெயலலிதா மகள் என அறிவிக்க வேண்டும். அவர்தான் என் தாய் என்பதை நிரூபிக்க டிஎன்ஏ பரிசோதனைக்கு உத்தரவிட வேண்டும். நான் ஜெயலலிதாவின் மகளாக 1980-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14-ஆம் தேதி பிறந்தேன். 2015-இல் என் வளர்ப்பு தாயான சைலஜா இறந்துவிட்டார். ஜெயலலிதாவிற்கு கலங்கம் ஏற்படுத்தும் என்பதால் இந்த உண்மையை இதுவரை தெரிவிக்காமல் இருந்தேன். ஆகவே, ஜெயலலிதா என் உண்மையான தாய் என்பதை நிரூபிக்க மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டுள்ள அவரது உடலை டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும். மேலும் அவரது உடலை தோண்டி எடுத்து வைஷ்ணவ பிராமிண ஐயங்கார் முறைப்படி இறுதிச்சடங்கு நடத்த வேண்டும்." என்று தெரிவித்துள்ளார். இந்த மனுவின் மீதான விசாரணை நீதிபதி மதன் பி லோகூர் தலைமையில் இன்று நடக்கவுள்ளது. 

நான் தான் ஜெயலலிதாவின் உண்மையான மகள் - பெங்களூரு பெண் அம்ருதா