ads

ஆளுநரின் பாதுகாப்பு வாகனம் மோதி இருவர் பலி

banwarilal purohit

banwarilal purohit

கடலூரில் உள்ள வண்டிப்பாளையத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று ஆய்வு செய்தார். இதனை அடுத்து அங்குள்ள கழிவறைகளை ஆய்வு செய்துள்ளார். அங்கிருந்த கீற்று மறப்பை விலகி பார்த்த போது பெண் ஒருவர் குளித்து கொண்டிருந்தார். ஆளுநரை பார்த்ததும் அந்த பெண் அலறியுள்ளார். இதனை அடுத்து ஊர் மக்கள் அவரை சுற்றி வளைத்துள்ளனர். விரைந்து வந்த போலீசார் அவரை மீட்டனர்.

பின் கடலூரில் இருந்து சென்னைக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது புதுகல்பாக்கம் அருகே சிலர் சாலையை கடக்க முயன்றுள்ளனர். அப்போது அதிவேகமாக வந்த அவரது பாதுகாப்பு வாகனம் சாலையை கடந்த பாதசாரிகள் மீது மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் யார் என்பது குறித்த தகவல்கள் அறியப்பட வில்லை. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆளுநரின் பாதுகாப்பு வாகனம் மோதி இருவர் பலி