ads

தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ள தீபிகா படுகோனே

பத்மாவத் படத்திற்கு பிறகு தீபிகா படுகோனே ஜீரோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் விரைவில் பட நிறுவனம் ஒன்றை துவங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பத்மாவத் படத்திற்கு பிறகு தீபிகா படுகோனே ஜீரோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் விரைவில் பட நிறுவனம் ஒன்றை துவங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்தி திரையுலகில் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே நடிப்பில் இறுதியாக வெளியான படம் பத்மாவத். இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் பல தடைகளை தாண்டி வெளியான இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று நல்ல வசூலையும் குவித்து வந்தது. இந்த படத்தில் ராணி பத்மினியாக தீபிகா படுகோனேவும், அலாவுதீன் கில்ஜியாக தீபிகா படுகோனே காதலனான ரன்வீர் சிங்கும், ரத்தன் சிங் கதாபத்திரத்தில் ஷாகித் கபூரும் நடித்திருந்தனர்.

இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தீபிகா படுகோனே தற்போது ஷாருக்கானுடன் இணைந்து 'ஜீரோ' படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் விரைவில் தயாரிப்பாளராக அறிமுகமாக உள்ளதாக தீபிகா படுகோனே தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் "திரைத்துறையில் படங்களை தயாரித்து வெளியிட வேண்டும் என்பது எனது பல நாள் கனவு. இதனால் தற்போது பட நிறுவனம் ஒன்றை துவங்க முடிவு செய்துள்ளேன்.

திரைத்துறையில் எனக்கு உள்ள மதிப்பும், ரசிகர்கள் என் மீது வைத்துள்ள அன்பும் என்னை மேன்மேலும் உற்சாகப்படுத்தி வருகிறது. என்னுடைய நடிப்பில் இறுதியாக வெளியான பத்மாவத் படத்தின் வசூல் முன்னணி நடிகர்களின் வசூலையும் தாண்டி விட்டதாக கூறுகின்றனர். இதற்கு முழு காரணமும் என்னுடைய ரசிகர்கள் மட்டுமே. இதனால் ரசிகர்கள் சந்தோசப்படும் விதமாக புதுப்புது படங்களை தயாரித்து வெளியிட முடிவு செய்துள்ளேன்." என்று அவர் தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ள தீபிகா படுகோனே