ads

ஷங்கரின் 2.0 படம் குறித்து மனம் திறந்த ஏஆர் ரஹ்மான்

இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 2.0 படம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 2.0 படம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கில திரையுலகில் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ள இசைப்புயல் ஏஆர் ரஹ்மான், மெர்சல் படத்தின் வெற்றிக்கு பிறகு 2.0, சர்கார், செக்க சிவந்த வானம், சர்வம் தாள மயம் மற்றும் சிவகார்த்திகேயன் ஏலியன் படம் என தமிழ் திரையுலகில் பிஸியான இசையமைப்பாளராக வலம் வருகிறார். இது தவிர ஒரு கதாசிரியர் மற்றும் தயாரிப்பாளராகவும் '99 சாங்ஸ்' படத்தை தமிழ் மற்றும் இந்தியில் உருவாக்கி வருகிறார்.

சமீபத்தில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள '2.0' படம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இந்த படம் குறித்து அவர் கூறுகையில் "இயக்குனர் ஷங்கர், தன்னுடைய '2.0' படத்தினை அவர் எதிர்பார்க்கும் தரத்திற்கு ஏற்ப உருவாக்க ரொம்பவே சிரமப்பட்டு வருகிறார். இது போன்ற ஹாலிவுட் தரத்திற்கு ஈடான படங்களை அவரால் மட்டும் தான் உருவாக்க முடியும். இயக்குனர் ஷங்கர் தமிழ் திரைத்துறைக்கு கிடைத்த வரம். என்னுடைய இசையமைப்பில் அவர் உருவாகியுள்ள இந்த படத்தின் சில பாடல்களை பார்த்தேன்.

எந்த கிராபிக்ஸ் காட்சியுமே இல்லாமல் அவ்வளவு ஆச்சர்யத்தை காண்பித்துள்ளார். இந்த படத்தின் மொத்த கிளைமேக்ஸ் காட்சியினை பார்த்து எனக்கு இன்னமும் படத்தின் ஆச்சர்யம் நீங்கவில்லை. அவ்வளவு சிறப்பாக உருவாக்கியுள்ளார். அவர் மிகப்பெரிய திறமைசாலி, அவருடைய படங்கள் என்றாலே ஆச்சர்யம் கலந்து வியப்பு இருக்கும். இந்த படத்திலும் இதுவரை எதிர்பாராத ஆச்சர்யத்தை கொடுத்துள்ளார்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் முன்னணி நடிகரான அக்ஷய் குமார் இந்த படத்தின் மூலம் வில்லனாக தமிழ் திரைத்துறைக்கு அறிமுகமாகிறார். சிட்டு குருவி வில்லனான அக்ஷய் குமாரை எதிர்த்து உலக காப்பாற்ற முயலும் சிட்டி ரோபோ கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். 1:40 மணி நேரம் மட்டுமே நீடிக்கும் இந்த படத்தினை லைக்கா ப்ரொடக்சன் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதிக்காக ரசிகர்கள் நீண்ட காலமாக காத்து கொண்டிருக்கின்றனர்.

ஷங்கரின் 2.0 படம் குறித்து மனம் திறந்த ஏஆர் ரஹ்மான்