ads

செக்க சிவந்த வானம் படத்தில் அருண் விஜய் கதாபாத்திரம்

நடிகர் அரவிந் சாமிக்கு பிறகு நடிகர் அருண் விஜய் கதாபாத்திரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் அரவிந் சாமிக்கு பிறகு நடிகர் அருண் விஜய் கதாபாத்திரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தல அஜித்தின் 'என்னை அறிந்தால் படத்தின் மூலம் வில்லனாக ரீஎன்ட்ரி கொடுத்த பிறகு நடிகர் அருண் விஜய் நடிப்பில் தெலுங்கு மற்றும் கன்னடத்தில் புரூஸ் லீ, சக்ரவியூகா போன்ற படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. இந்த படங்களுக்கு பிறகு மீண்டும் நாயகனாக தமிழ் சினிமாவிற்கு 'குற்றம் 23' படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார். இந்த படம் விமர்சனங்கள் மற்றும் வசூல் ரீதியாகவும் நல்ல பெயர் கொடுத்தது.

இந்த படத்திற்கு பிறகு தமிழ், தெலுங்கு, இந்தியில் பிரமாண்டமாக உருவாகி வரும் 'சாஹு' படத்திலும், இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் 'தடம்' படத்திலும், இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் 'செக்க சிவந்த வானம்' படத்திலும் நடித்து வருகிறார். இதில் மகிழ் திருமேனியின் 'தடம்' படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் இசையையும் விரைவில் வெளியிடவுள்ளதாக படக்குழு சமீபத்தில் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து தற்போது இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'செக்க சிவந்த வானம்' படத்தில் இவருடைய கதாபாத்திரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மல்டி ஸ்டார் படமான இந்த படத்தில் அருண் விஜய், 'தியாகு' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நேற்று நடிகர் அரவிந் சாமி கதாபாத்திரம் குறித்து படக்குழு வெளியிட்டுள்ள நிலையில் அருண் விஜய் கதாபாத்திரத்தையும் வெளியிட்டுள்ளது. இவர்களை தொடர்ந்து அடுத்ததாக விஜய் சேதுபதி, சிம்பு ஆகியோரின் கதாபாத்திரத்தினையும் அடுத்தடுத்து வெளியிட உள்ளது.

செக்க சிவந்த வானம் படத்தில் தியாகு கதாபாத்திரத்தில் அருண் விஜய் செக்க சிவந்த வானம் படத்தில் தியாகு கதாபாத்திரத்தில் அருண் விஜய்

செக்க சிவந்த வானம் படத்தில் அருண் விஜய் கதாபாத்திரம்