ads

மும்தாஜுடன் சண்டை போட களமிறங்கிய விஜயலட்சுமி

மகத் வெளியே சென்றதும் அடுத்தடுத்து மும்தாஜ் மிகுந்த உற்சாகமுடன் காணப்படுகிறார். அவரிடம் மல்லுக்கட்ட இதோ வந்தாச்சு விஜயலட்சுமி.

மகத் வெளியே சென்றதும் அடுத்தடுத்து மும்தாஜ் மிகுந்த உற்சாகமுடன் காணப்படுகிறார். அவரிடம் மல்லுக்கட்ட இதோ வந்தாச்சு விஜயலட்சுமி.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 72வது நாளான இன்று, நிகழ்ச்சியை பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர். வழக்கம்போல புரோமோவை வெளியீட்டு ஆர்வத்தை அதிகரிக்க செய்துள்ளனர். ஆனால் ஒவ்வொரு நாளுமே ப்ரோமோவை பார்த்து ரசிகர்கள் ஏமாற்றம் அடைகின்றனர். தற்போது வெளியிட்டுள்ள ப்ரோமோவில் போட்டியாளர்களுக்கு வீட்டில் இருந்து கடிதங்கள் வந்துள்ளன.

இந்த கடிதங்களை படித்து ஒவ்வொருவரும் கண்ணீர் விட்டு அழுகின்றனர். மகத் பிரிவினை தாங்க முடியாமல்ஏற்கனவே புலம்பி கொண்டிருந்த யாஷிகா தற்போது வீட்டை நினைத்து புலம்புகிறார். இவரை தவிர அனைத்து போட்டியாளர்களுக்குமே வீட்டில் இருந்து கடிதம் வந்துள்ளது. இதனால் இன்றைய நிகழ்ச்சி பயங்கர சென்டிமெண்டாக இருக்கும். இது தவிர விஜயலட்சுமிக்கும் மும்தாஜுக்கும் இடையே சண்டை ஆரம்பமாகியுள்ளது.

மும்தாஜுக்கு மட்டும் ஆலிவ் ஆயிலில் தோசை சுட்டுக்கொடுக்க சொன்ன சென்றாயனிடம், நான் ஒன்னும் வேலைக்காரி இல்ல ஒரு போட்டியாளர் என்று திட்டிவிடுகிறார். மகத் வெளியே சென்றதும் மல்லே மல்லே ஆட்டம் ஆடி உற்சாகமாக இருந்த மும்தாஜுக்கு இணையாக விஜயலட்சுமி களமிறங்கியுள்ளார். மேலும் மகத் இல்லாமல் போனதால் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா இருவருமே ஒதுக்கப்படுகின்றனர். இதனால் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்து கொண்டிருக்கின்றனர்.

மும்தாஜுடன் சண்டை போட களமிறங்கிய விஜயலட்சுமி