ads

சண்டகோழிக்கு பிறகு இடம் பொருள் ஏவல் வெளியாகும்

விஜய் சேதுபதியின் இடம் பொருள் ஏவல் படத்தின் வெளியீடு குறித்த தகவலை இயக்குனர் சீனு ராமசாமி வெளியிட்டுள்ளார்.

விஜய் சேதுபதியின் இடம் பொருள் ஏவல் படத்தின் வெளியீடு குறித்த தகவலை இயக்குனர் சீனு ராமசாமி வெளியிட்டுள்ளார்.

நடிகர் மற்றும் இயக்குனரான சீனு ராமசாமி இயக்கத்தில் 'தர்மதுரை' படத்திற்கு பிறகு இடம் பொருள் ஏவல், கண்ணே கலைமானே போன்ற படங்கள் உருவாகியுள்ளது. இதில் உதயநிதி, தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள 'கண்ணே கலைமானே' படத்தின் எடிட்டிங் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. ஆனால் 'இடம் பொருள் ஏவல்' படம் எதிர்பாராத காரணங்களால் தொடர்ந்து தாமதமாகி கொண்டே செல்கிறது. இந்த படம் எப்போது வெளிவரும் என்று ரசிகர்கள் தொடர்ந்து இயக்குனர் சீனு ராமசாமியிடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தற்போது தான் இயக்குனர் சீனு ராமசாமி இந்த படத்தின் வெளியீடு குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். ரசிகர் ஒருவர் 'இடம் பொருள் ஏவல்' படத்தை எப்போது வெளிவிடுவீங்க என்று கேட்டதற்கு இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியாகும் என இயக்குனர் லிங்குசாமி நம்பிக்கை தந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 'இடம் பொருள் ஏவல்' படத்திற்கான அறிவிப்பு கடந்த 2012இல் வெளியானது. இதன் பிறகு பெங்களூரு தமிழன், சொந்த ஊரு போன்ற பெயர்களுக்கு பிறகு 'இடம் பொருள் ஏவல்' என்று இந்த படத்தின் பெயரை உறுதி செய்தனர்.

இந்த படத்தில் நடிக்க முதலில் விமல் ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின்பு மற்றொரு நாயகனாக விஜய் சேதுபதி தேர்வானார். ஆனால் விமல் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் அட்டகத்தி தினேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின்னர் அட்டகத்தி தினேஷிற்கு பதிலாக விஷ்ணு விஷால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். நடிகர்கள் தவிர நடிகைகள் கதாபாத்திரத்திலும் பல மாற்றங்களை செய்து ஒரு வழியாக ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் நந்திதா ஒப்பந்தம் ஆனார்கள்.

சண்டகோழிக்கு பிறகு இடம் பொருள் ஏவல் வெளியாகும்

இப்படி பல மாற்றங்களை செய்து படப்பிடிப்பினை கொடைக்கானல் பகுதியில் சுற்றியுள்ள பூம்பரை, படம்புத்தூர், குண்டுபட்டி போன்ற இடங்களில் 40 நாட்களில் நடத்தி முடித்தனர். கடந்த 2014இல் இந்த படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்தது. ஆனால் இந்த படத்தின் தயாரிப்பாளரான திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் நிதி சிக்கல்கள் காரணமாக நான்கு ஆண்டுகளாக இந்த படம் வெளிவராமல் தவித்து வருகின்றது. எப்படியோ இப்போது தான் இந்த படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி படத்தின் வெளியீடு குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். இவருடைய தகவலின் படி இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'சண்டக்கோழி 2' படத்தின் வெளியீட்டிற்கு பிறகு 'இடம் பொருள் ஏவல்' படம் வெளியாகவுள்ளது. 

சண்டகோழிக்கு பிறகு இடம் பொருள் ஏவல் வெளியாகும்