ads

என்ஜிகேவிற்கு பிறகு புதுப்பேட்டை 2விற்கு தயாரான செல்வராகவன்

என்ஜிகேவிற்கு பிறகு இயக்குனர் செல்வராகவன் தனுஷின் புதுப்பேட்டை 2 படத்தை இயக்க முடிவு செய்துள்ளார்.

என்ஜிகேவிற்கு பிறகு இயக்குனர் செல்வராகவன் தனுஷின் புதுப்பேட்டை 2 படத்தை இயக்க முடிவு செய்துள்ளார்.

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் 'என்ஜிகே' படம் பலத்த எதிர்பார்ப்பிற்கு நடுவே உருவாகி வருகிறது. எதிர்பாராத காரணங்களால் இந்த படத்தின் பணிகள் தாமதமாகி கொண்டு செல்கிறது. இதனால் இந்த படத்தை பொங்கலுக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. முன்னதாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் போன்றவற்றை படக்குழு வெளியிட்டது. இதன் பிறகு அடுத்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

என்ஜிகேவிற்கு பிறகு புதுப்பேட்டை 2விற்கு தயாரான செல்வராகவன்

இந்த படத்தை முடித்த பிறகு இயக்குனர் செல்வராகவன் அடுத்ததாக 'புதுப்பேட்டை' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் 'புதுப்பேட்டை 2' விற்காக ஆர்வமாக காத்திருப்பதாக ரசிகர் ஒருவர் இயக்குனர் செல்வராகவனிடம் தெரிவித்துள்ளார். அதற்கு அவர் 'அதற்கான நேரம் வரும். அப்போது கண்டிப்பாக இயக்குவேன்' என்று பதிலளித்துள்ளார்.

என்ஜிகேவிற்கு பிறகு புதுப்பேட்டை 2விற்கு தயாரான செல்வராகவன்

கடந்த 2006இல் நடிகர் தனுஷை ரவுடியாக அறிமுகப்படுத்திய படம் 'புதுப்பேட்டை'. யுவன் சங்கர் ராஜாவின் இசையமைப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் தனுஷ், சினேகா, சோனியா அகர்வால், அழகம் பெருமாள், பாலா சிங், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினையும் நல்ல வசூலையும் பெற்று தந்தது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தினை எடுக்க செல்வராகவன் முடிவு செய்துள்ளார். விரைவில் இந்த படம் குறித்த நல்ல செய்தி வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

என்ஜிகேவிற்கு பிறகு புதுப்பேட்டை 2விற்கு தயாரான செல்வராகவன்