Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

திகில் சம்பவத்தில் ஈடுபடும் சுசீந்திரன், விக்ராந்த்

suseenthiran vikranth acting

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், போக்கிரி ராஜா போன்ற படங்களை இயக்கியவர் ராம்பிரகாஷ் ராயப்பா. இவர் தற்பொழுது இயக்குனர்களை களமிறங்க வைத்து 'சுட்டுப்பிடிக்க உத்தரவு' என்ற புது படத்தினை இயக்கவுள்ளர். இந்த படத்தில் இயக்குனர் சுசீந்திரன், மிஸ்கின் மற்றும் விக்ராந்த் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளனர். இது வரை எதார்த்தமான படங்களை எடுத்து வந்து நல்ல வரவேற்பினை பெற்றிருந்த சுசீந்திரன் முதல் முறையாக படங்களில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் துவங்கவுள்ளது. 

இந்நிலையில் படத்தின் இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா படத்தினை பற்றி கூறும் போது, "பல உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு உருவாக்க உள்ள இப்படத்தில் திரில்லர்  காட்சிகள் அதிகளவு நிறைந்து காணப்படவுள்ளது.சுசீந்திரன் மற்றும் விக்ராந்த் இணைந்து தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டி பணியை செய்து வருகிறார்கள். அவர்கள் பணியில் இருக்கும் ஒரு சமயத்தில் திகில் க்ரைம் ஒன்று நடக்கிறது. இந்த க்ரைம் சம்மந்தப்பட்ட விசாரணையை விசாரிக்க போலீஸ் அதிகாரியாக மிஸ்கின் நடிக்கவுள்ளார். படம் விறுவிறுப்புக்கு, சுவாரியத்துக்கும் குறைவே இருக்காது" என்று கூறியுள்ளார்.          

 

திகில் சம்பவத்தில் ஈடுபடும் சுசீந்திரன், விக்ராந்த்