ads

சூர்யாவின் என்ஜிகே படக்குழுவின் முக்கிய அறிவிப்பு

சூர்யாவின்

சூர்யாவின் 'NGK' படத்தின் தயாரிப்பு நிறுவனமான டிரிம் வாரியர்ஸ் பிக்ச்சர்ஸ் நிறுவனம் முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

இரண்டாம் உலகம் படத்திற்கு பிறகு இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் எஸ்ஜெ சூர்யாவின் 'நெஞ்சம் மறப்பதில்லை' மற்றும் சூர்யாவின் 'என்ஜிகே' போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இதில் கடந்த மூன்று வருடங்களாக உருவாகி வரும் நெஞ்சம் மறப்பதில்லை படம் எதிர்பாராத காரணங்களால் தொடர்ந்து தள்ளி கொண்டே செல்கிறது. இந்த படத்திற்கு பிறகு இயக்குனர் செல்வராகவன் நடிகர் சூர்யாவுடன் முதன் முறையாக இணைந்து 'என்ஜிகே' படத்தை உருவாக்கி வருகிறார்.

ட்ரீம் வாரியர்ஸ் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் அடுத்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான டிரீம் வாரியர்ஸ் முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் "NGK எங்களுடைய மிக முக்கியமான படம். ஒவ்வொரு நாளும் இந்த படத்திற்கு சூர்யா மற்றும் செல்வராகவன் ரசிகர்கள் அளிக்கும் ஆதரவுகள் எங்களை உற்சாகபடுத்தி வருகிறது.

இந்த படம் எங்களுடைய படங்களில் சிறந்த பொழுதுபோக்கு படமாக உங்களுக்கு அளிப்போம் என்பதை உறுதி அளிக்கிறோம். இந்த படத்தினை எங்களால் முடிந்த அளவிற்கு விரைவில் வெளியிட கடுமையாக உழைத்து வருகிறோம். ஆனால் இந்த படத்தை முடிக்க  நாங்கள் எதிர்பார்த்ததை விட நீண்ட நாட்கள் ஆகின்றது. இந்த படத்தை தீபாவளிக்கு கொண்டு வர முயற்சி செய்கிறோம்.

விரைவில் இந்த படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பினை அறிவிப்போம்" என ட்ரீம் வாரியர்ஸ் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் தற்போது ரசிகர்கள் குழப்பத்துடன் உள்ளனர். இந்த படத்தின் தீபாவளி வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்து கொண்டிருக்கும் நேரத்தில் இந்த படத்தின் பணிகள் அதிகரித்து கொண்டு செல்வதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Image Credit - @DreamWarriorpic (Twitter)Image Credit - @DreamWarriorpic (Twitter)

சூர்யாவின் என்ஜிகே படக்குழுவின் முக்கிய அறிவிப்பு