ads

த்ரிஷ்யம் 2 படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியது

த்ரிஷ்யம் 2 படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியது

த்ரிஷ்யம் 2 படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியது

மலையாள வெற்றி படமான த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகத்தின் பூஜை இன்று நடத்தப்பட்டு, படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர். பூஜை எர்ணாகுளத்தில் நடைபெற்றது, நகரத்தில் படப்பிடிப்பு தொடங்கி பின்னர் தொடுபுழாவில் படப்பிடிப்பு நடக்கும் என்று தெரிகிறது.

பூஜை விழாவில் இயக்குனர் ஜீத்து ஜோசப், தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பவூர், கணேஷ் குமார் மற்றும் ஒரு சிலர் கலந்து கொண்டனர். மோகன்லால் இந்த மாதம் 25 ஆம் தேதிக்குள் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று படத்தின் பூஜை முடிந்தவுடன், நடிகர் மோகன்லால் தனது ட்விட்டர் பக்கத்தில் பூஜை புகைப்படங்களை பகிர்ந்தார். அரசின் வழிகாட்டலின் படி, COVID-19 விதி முறைகளையும் பின்பற்றி படப்பிடிப்பு நடத்தப்படும் என்று தயாரிப்பாளர் தரப்பில் கூறியுள்ளனர்.

த்ரிஷ்யம் முதல் பாகத்தின் தொடர்ச்சி இரண்டாம் பாகத்திலும் இருக்கும் மற்றும் முதல் பாகத்தை போல், கதைக்களம் விறுவிறுப்பாக இருக்கும் என இயக்குனர் ஜீத்து ஜோசப் தெரிவித்துள்ளார்.

த்ரிஷ்யம் 2 படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியது

த்ரிஷ்யம் 2 படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியது

த்ரிஷ்யம் 2 படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியது