ads

ரேடியோ ஜாக்கியானா ஜோதிகாவின் காற்றின் மொழி படப்பிடிப்பு

மொழி படத்திற்கு பிறகு இணைந்துள்ள ராதாமோகன் ஜோதிகாவின் புதுப்படத்திற்கு காற்றின் மொழி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன்4ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக நடைபெற உள்ளது.

மொழி படத்திற்கு பிறகு இணைந்துள்ள ராதாமோகன் ஜோதிகாவின் புதுப்படத்திற்கு காற்றின் மொழி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன்4ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக நடைபெற உள்ளது.

36 வயதினிலே, மகளிர் மட்டும், நாச்சியார் போன்ற வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ஜோதிகா. இவருடைய நடிப்பில் பாலா இயக்கத்தில் இறுதியாக வெளியான நாச்சியார் படம் நல்ல பெயரை பெற்று தந்தது. இந்த படத்திற்கு பிறகு ஜோதிகா அடுத்ததாக மொழி படத்தின் இயக்குனர் ராதா மோகனுடன் இணைந்து நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு காற்றின் மொழி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் நடிக்க உள்ள நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விதார்த் மற்றும் தயாரிப்பாளர் மற்றும் நடிகையான மஞ்சு லட்சுமி நடிக்க உள்ளனர். இவர்களுடன் நடிகர் மற்றும் இயக்குனரான மனோபாலா, எம்எஸ் பாஸ்கர், மோகன் ராமன் ஆகியோரும் இணைந்துள்ளனர். இசைப்புயல் ஏஆர் ரஹ்மானின் மருமகன் ஏஹச் காசிப் இசையமைக்க உள்ள இந்த படத்தினை போப்ட்டா மற்றும் கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் தனஞ்செயன் மற்றும் விக்ரம் குமார் ஆகியோர் தயாரிக்க உள்ளனர்.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பை வரும் ஜூன் 4ஆம் தேதி முதல் துவங்கவுள்ளதாக தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்துள்ளார். மேலும் ஜூன்4ஆம் தேதி துவங்கி நான் ஸ்டாப்பாக படப்பிடிப்பை நிகழ்த்த உள்ளனர். இந்த படப்பிடிப்பை நான்கு மாதத்திற்குள் முடித்து வரும் அக்டொபர் மாதத்தில் இந்த படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. தும்ஹரி சுலு படத்தின் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் பெண்போலீஸ் கதாபாத்திரத்திற்கு பிறகு ஜோதிகா ரேடியோ ஜாக்கியாக நடிக்க உள்ளார்.

Photo Credit - @Dhananjayang (Twitter)Photo Credit - @Dhananjayang (Twitter)

ரேடியோ ஜாக்கியானா ஜோதிகாவின் காற்றின் மொழி படப்பிடிப்பு