Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

கந்துவட்டி கொடுமையை அரசு, சினிமா தடுக்க வேண்டும் - ட்விட்டரில் கமல்

kamal haasan tweet about ashok kumar suicide

கந்துவட்டி கொடுமையால் நடிகர் சசி குமாரின் உறவினர் மற்றும் தயாரிப்பாளரான அசோக் குமார் தற்கொலை செய்து கொண்டார். என் தற்கொலைக்கு காரணம் சினிமா துறையின் கந்துவட்டி தொழிலதிபர் அன்புசெழியன் என்பதை தெரியப்படுத்தும் வகையில் ஒரு கடிதத்தை எழுதியுள்ளார்.   

இதன் காரணத்தினால் அன்புசெழியன் மீது பல எதிர்ப்புகளும், ஆதரவுகளும் மாறிமாறி தொடர்கிறது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் இறந்த அசோக் குமாருக்கு தனது ட்விட்டர் மூலம்  இன்று இரங்களை தெரிவித்துள்ளார்.

அதில் கமல்ஹாசன் , கந்துவட்டிக் கொடுமை ஏழை விவசாயி முதல் பணக்காரர்கள் என நம்பப்படும் சினிமாக்காரர் வரை ஆட்டிப்படைப்பதை சட்டமும் சினிமாத்துறையும் தடுத்தாக வேண்டும். திரு. அசோக்குமாரின் அகாலமரணம் போல் இனி நிகழவிடக்கூடாது. குடும்பத்தார்க்கும் நட்புக்கும் கலைத்துறையின் அனுதாபங்கள், என்று பதிவு செய்துள்ளார்.

கந்துவட்டி கொடுமையை அரசு, சினிமா தடுக்க வேண்டும் - ட்விட்டரில் கமல்