ads

பாடலை வெளியீட்டு கேரளா மக்களின் கோபத்திற்கு ஆளான மம்மூட்டி

கேரளா மாநிலம் முழுவதும் வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருக்கும் போது முன்னணி நடிகரான மம்முட்டி தன்னுடைய ஒரு குட்டநாதன் பிளாக் படத்தின் பாடலை வெளியிட்டுள்ளார்.

கேரளா மாநிலம் முழுவதும் வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருக்கும் போது முன்னணி நடிகரான மம்முட்டி தன்னுடைய ஒரு குட்டநாதன் பிளாக் படத்தின் பாடலை வெளியிட்டுள்ளார்.

தொடர் கனமழை காரணமாக கேரளா மாநிலம் முழுவதும் வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருக்கிறது. இதனால் வீடுகளை இழந்து வெள்ளத்தில் அவதி பட்டு வரும் மக்களுக்கு உதவ ஏராளமான சமூக ஆர்வலர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் உதவ முன்வந்துள்ளனர்.

இந்நிலையில் மலையாள முன்னணி நடிகரான மம்முட்டி தான் மலையாளத்தில் நடித்து வரும் 'ஒரு குட்டநாதன் பிளாக் (oru kuttanadan blog)' படத்தின் ஆடியோ பாடலை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். இதனால் பொது மக்களும் அவரது ரசிகர்களும் கடுப்பாகி அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதன் பிறகு தன்னுடைய தவறை உணர்ந்து பொது மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு தன்னுடைய சமூக வலைத்தளங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

கேரளா, கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த 10 நாட்களுக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. தற்போது பருவமழை தீவிரமடைந்து வருவதால் தமிழகத்தில், கோயம்பத்தூர், சேலம், சென்னை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் கனமழை பெய்துள்ளது. தொடர்ந்து கனமழை தீவிரமடைந்து வருவதால் மீட்பு பணிகள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அரசு தெரிவித்துள்ளது. 

பாடலை வெளியீட்டு கேரளா மக்களின் கோபத்திற்கு ஆளான மம்மூட்டி