ads

வெளியானது செக்க சிவந்த வானம் இரண்டாவது ட்ரைலர்

இயக்குனர் மணிரத்னமின் செக்க சிவந்த வானம் படத்தின் இரண்டாவது ட்ரைலர் வெளியாகியுள்ளது.

இயக்குனர் மணிரத்னமின் செக்க சிவந்த வானம் படத்தின் இரண்டாவது ட்ரைலர் வெளியாகியுள்ளது.

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் 'காற்று வெளியிடை' படத்திற்கு பிறகு அடுத்ததாக வெளியாகவுள்ள படம் 'செக்க சிவந்த வானம்'. இந்த படம் வரும் செப்டம்பர் 27ஆம் தேதியில் வெளியாகவுள்ளது. இன்னும் 5நாட்களே உள்ள நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் இசை போன்றவையை படக்குழு முன்னதாக வெளியிட்டது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது ட்ரைலரை இன்று 11 மணிக்கு வெளியிடுவதாக படக்குழு தெரிவித்தது. இதன்படி தற்போது இந்த படத்தின் இரண்டாவது ட்ரைலர் வெளியாகியுள்ளது.

இந்த ட்ரைலரில் சேனாதிபதி இடத்திற்காக அண்ணன் தம்பிகளான அருண் விஜய், சிம்பு, அரவிந் சாமி ஆகியோர் ஒருவருக்கொருவர் பகையாளி ஆகின்றனர். இவர்களுக்கு நடுவில் போலீசாக விஜய் சேதுபதியும் நுழைகிறார். இந்த நான்கு நாயகர்களில் யார் இறுதியாக வெல்ல போவது என்பது படத்தின் சஸ்பென்சாக இருக்கும். இத்தனை நாட்கள் ஒவ்வொருவரையும் தனி தனி திரையில் கண்டு வந்த ரசிகர்கள் நான்கு முன்னணி நடிகர்களையும் ஒரே திரையில் மணிரத்னம் படத்தின் மூலம் காணவுள்ளனர். இன்னும் 5நாட்களே உள்ளதால் ரசிகர்கள் ஆர்வமுடன் இந்த படத்திற்காக காத்து கொண்டிருக்கின்றனர். 

வெளியானது செக்க சிவந்த வானம் இரண்டாவது ட்ரைலர்