ads

வெளியானது மணிரத்னமின் செக்க சிவந்த வானம் ட்ரைலர்

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள செக்க சிவந்த வானம் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள செக்க சிவந்த வானம் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள செக்க சிவந்த வானம் படத்தின் ட்ரைலர் இன்று காலை 10 மணியளவில் வெளியிட உள்ளதாக நேற்று படக்குழு அறிவித்தது. இதன்படி தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இந்த படம் தொழிற்சாலைகளை மையமாக வைத்து உருவாகியுள்ளதாக ரசிகர்கள் நினைத்திருந்தனர்.

ஆனால் தற்போது வெளியிட்டுள்ள இந்த ட்ரைலரில், ஒரு தொழிலதிபர் மற்றும் டானாக இருக்கும் பிரகாஷ் ராஜ், அவருக்கு மகன்களான அரவிந் சாமி, அருண் விஜய், சிம்பு ஆகியோர் பிரகாஷ் ராஜ் இடத்தை பிடிக்க முயல்கின்றனர். இது தவிர இந்த படத்தின் மூலம் மீண்டும் காவல் அதிகாரியாக மாறியுள்ள விஜய் சேதுபதியும், அவரது நண்பன் அரவிந் சாமியுடன் நட்பு வைத்து பிரகாஷ் ராஜ் இடத்தை பிடிக்க முயல்கிறார்.

இதனால் இவர்களை கொள்ள பிரகாஷ் ராஜ் முடிவு செய்ய, நாவரும் ஒன்றிணைந்து தங்களை கொள்ள வரும் கூலிப்படையை சமாளித்து எப்படி தப்பிக்கின்றனர் என்பது படத்தின் கதையாக அமைந்துள்ளது. வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட இந்த படத்தின் மூலம் நான்கு முன்னணி நடிகர்கள் கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர். லைக்கா ப்ரொடக்சன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசைப்புயல் இசையமைத்துள்ளார்.

வெளியானது மணிரத்னமின் செக்க சிவந்த வானம் ட்ரைலர்