ads

'செய்' படத்தின் மூலம் முதல் முறையாக தமிழில் பாடும் பாகிஸ்தான் பாடகர்

'செய்' படத்தின் மூலம் முதல் முறையாக தமிழில் பாடும் பாகிஸ்தான் பாடகர்

'செய்' படத்தின் மூலம் முதல் முறையாக தமிழில் பாடும் பாகிஸ்தான் பாடகர்

நடிகர் நகுல் நடிப்பில் டிசம்பர் 8-இல் 'செய்' படம் உலகமெங்கும் வெளிவர உள்ளது. இந்த படத்தை ராஜ் பாபு இயக்கியுள்ளார். ட்ரிப்பி டர்டூல் ப்ரொடக்சன் சார்பில் மண்ணு மற்றும் உமேஷ் ஆகியோர் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்திற்கு நிக்ஸ் லோபஸ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் நகுல், நாசர், ஆன்ச்சல் முன்ஜல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

இந்த படத்தில் இடம்பெறும் 'இறைவா' பாடலை பாகிஸ்தான் பாடகரான ஆதிப் அலி பாடியுள்ளார். தமிழில் முதன் முறையாக ஒரு பாகிஸ்தான் பாடகர் பாடுவது இதுவே முதன் முறையாகும். மேலும் இவர் அடுத்ததாக விரைவில் திரைக்கு வரவிருக்கும் 'ஜுலி 2' படத்திற்கு இசையமைத்துள்ளார். இவர் பல பாகிஸ்தானி பாடல்களையும், ஹிந்தி பாடல்களையும் பாடியுள்ளார். ஆதிப் அலியுடன் இணைந்து சபதஸ்வரா ரிஷுவும் இறைவா பாடலை பாடியுள்ளார். இவர் ஹிந்துஸ்தானி பாடகர். அனைவருக்கும் பிடித்த பாடலாக இந்த சூஃபி பாடல் இருக்குமென படக்குழு தெரிவித்துள்ளது.

'செய்' படத்தின் மூலம் முதல் முறையாக தமிழில் பாடும் பாகிஸ்தான் பாடகர்