Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

தேவி படத்தினை தொடர்ந்து மீண்டும் ஹாரரில் களமிறங்கும் பிரபு தேவா

prabhu deva new horror movie

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர், நடன இயக்குனரான பிரபு தேவா யங் மங் சங், குலேபகாவலி, மெர்குரி, சார்லி சாப்ளின்-2, தெலுங்கில் காமோஷி மற்றும் பெயரிடப்படாத சில படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதில் கல்யாண் இயக்கத்தில் பிரபு தேவா நடித்து வந்த குலேபகாவலி படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்பொழுது போஸ்ட் ப்ரொடெக்சன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இப்படத்தின் இசை சில நாட்களுக்கு முன்பு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.     

இந்நிலையில் பிரபு தேவாவின் அடுத்த பட தகவல் குறித்து செய்தி வெளிவந்துள்ளது. இந்த படத்தினை  புதுமுக இயக்குனர் ஆகாஷ் சாம் இயக்கவுள்ளார். மேலும் இந்த புது படம் ஹாரரை மையமாக கொண்டு உருவாகவிருக்கிறது. இந்த படத்திற்கு முன்னதாகவே கடந்த ஆண்டில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளிவந்த 'தேவி' என்ற ஹாரர் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இந்த படத்தினை தொடர்ந்து இரண்டாவது முறையாக மீண்டும் ஒரு ஹாரர் படத்தில் பிரபு தேவா இணைந்துள்ளார்.

 இந்த படத்தினை பற்றி இயக்குனர் ஆகாஷ் சாம் கூறுகையில் ஹில் ஸ்டேஷன் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தில் ஹாரர் சார்ந்த குடும்ப படமாக எடுக்கவிருப்பதாகவும் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நாளை  (29-12-17) மைசூர் பகுதியில் தொடர்ந்து 20நாட்கள் நடைபெற இருப்பதாகவும் கூறியுள்ளார். இந்த படத்தின் முக்கிய வேடத்தில் நடிப்பதற்கு அறம் படத்தில் நடிப்பில் கலக்கியிருந்த ராம் இணைந்துள்ளர். மேலும் பிரபு தேவா மற்றும் ராம் சம்பந்தப்பட்ட காட்சிகள் முதல் முதலாக துவங்கவிருக்கும் இப்படத்தின் மற்ற நடிகர் - நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர், கலை கலைஞர்கள் மற்றும் தலைப்பு குறித்த தகவல் விரையில் வெளியிடுவதாகவும் கூறியுள்ளார்.           

தேவி படத்தினை தொடர்ந்து மீண்டும் ஹாரரில் களமிறங்கும் பிரபு தேவா