ads

விஜயின் கத்தி படத்தை ரீமேக் செய்யவுள்ள சஞ்சய் லீலா பன்சாலி

பத்மாவத் படத்திற்கு பிறகு தயாரிப்பாளர் சஞ்சய் லீலா பன்சாலி கத்தி படத்தினை ரீமேக் செய்ய உள்ளார்.

பத்மாவத் படத்திற்கு பிறகு தயாரிப்பாளர் சஞ்சய் லீலா பன்சாலி கத்தி படத்தினை ரீமேக் செய்ய உள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் கூட்டணியில் இறுதியாக வெளியான படம் 'கத்தி'. இரட்டை வேடத்தில், விவசாயிகளின் கஷ்டங்களை மையப்படுத்தி உருவாகியிருந்த இந்த படம் நல்ல வசூலை குவித்து ரசிகர்களின் பேராதரவை பெற்றிருந்தது. அனிருத் இசையமைப்பில் மாபெரும் வெற்றி கண்ட இந்த படம் சிறந்த இயக்குனர், சிறந்த படம், சிறந்த வில்லன், சிறந்த இசையமைப்பாளர் உள்ளிட்ட 33 விருதுகளுக்கு தேர்வாகி 14 விருதுகளை வென்றுள்ளது.

தற்போது விஜய் ஏஆர் முருகதாஸ் கூட்டணியில் 'கத்தி' படத்திற்கு பிறகு 'சர்கார்' படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. கடந்த 2014இல் வெளியான 'கத்தி' படம் தற்போது இந்தியில் ரிமேக் ஆக உள்ளது. இந்த படத்தின் ரீமேக் உரிமையை பிரபல முன்னணி தயாரிப்பாளரான சஞ்சய் லீலா பன்சாலி பெற்றுள்ளார். இந்திய சினிமாவில் பல வெற்றிப்படங்களை படைத்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரில் ஒருவரான சஞ்சய் லீலா பன்சாலி, தனது பன்சாலி ப்ரொடக்சன் நிறுவனம் சார்பில் 'கத்தி' படத்தினை ரீமேக் செய்யவுள்ளார்.

இவருடைய கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் மற்றும் தயாரிப்பில் இறுதியாக வெளியான படம் 'பத்மாவத்'. இந்திய சினிமாவில் இது வரை எந்த படத்திற்கும் இப்படி ஒரு பிரச்சனையும் கலவரமும் நடந்ததில்லை. அந்த அளவிற்கு இந்த படத்திற்கான எதிர்ப்பு நாட்டையே பரபரப்பாக வைத்தது. பல தடைகளை தாண்டி கடந்த ஆண்டில் வெளியான இந்த படம் மாபெரும் வெற்றி கண்டது. இந்த படத்திற்கு பிறகு சஞ்சய் லீலா பன்சாலி, தமிழில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான 'கத்தி' படத்தினை ரீமேக் செய்யவுள்ளார்.

விஜயின் கத்தி படத்தை ரீமேக் செய்யவுள்ள சஞ்சய் லீலா பன்சாலி