ads

செக்க சிவந்த வானம் படத்தில் சிம்புவின் கதாபாத்திரம்

செக்க சிவந்த வானம் படத்தில் சிம்புவின் கதாபாத்திரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

செக்க சிவந்த வானம் படத்தில் சிம்புவின் கதாபாத்திரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குனர் மணிரத்னமின் மல்டி ஸ்டார் படமான 'செக்க சிவந்த வானம்' படத்தின் கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளது. முன்னதாக அரவிந் சாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா ஆகியோரின் கதாபாத்திரங்கள் வெளியிடப்பட்ட நிலையில் தற்போது சிம்புவின் கதாபாத்திரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி இந்த படத்தில் சிம்பு 'Ethi - எத்தி' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

வரதன், தியாகு, ரசூல் போன்று தமிழ் பெயர்களாக இருக்கும் போது சிம்புவிற்கு மட்டும் ஏன் வித்தியாசமான பெயர் என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். 'Ethi' என்ற வார்த்தைக்கு தென்னாப்பிரிக்காவின் சுலு மொழியில் 'புத்தகம்' என்று அர்த்தம் உள்ளது. இதன் மூலம் ஒரு தமிழனாக மக்களுக்கு குரல் கொடுத்து வந்த சிம்பு வேறு இனத்தவராகவும் மக்களுக்காக குரல் கொடுக்க உள்ளார். இதுவரை மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் அனைத்தும் காதலுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக ரசிகர்களுக்கு அமைந்தது. ஆனால் இந்த படம் முற்றிலும் மாறுபட்ட படமாக ரசிகர்களுக்கு அமையும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

எத்தி கதாபாத்திரத்தில் சிம்பு எத்தி கதாபாத்திரத்தில் சிம்பு

செக்க சிவந்த வானம் படத்தில் சிம்புவின் கதாபாத்திரம்