ads

தன் மகள் ஆராதனாவை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய சிவகார்த்திகேயன்

கனா படத்தின் மூலம் சிவகார்த்திகேயன் தன் மகளை திரையுலகிற்கு அறிமுகம் செய்துள்ளார்.

கனா படத்தின் மூலம் சிவகார்த்திகேயன் தன் மகளை திரையுலகிற்கு அறிமுகம் செய்துள்ளார்.

மிமிக்ரி கலைஞன், தொகுப்பாளர், நடிகர் மற்றும் தற்போது தயாரிப்பாளராக மாறியுள்ள சிவகார்த்திகேயன், தனது சொந்த நிறுவனமான சிவகார்த்திகேயன் ப்ரொடக்சன் நிறுவனம் மூலம் 'கனா' படத்தை தயாரித்து வருகிறார். தன்னுடைய நண்பர் மற்றும் பாடகரான அருண்ராஜா காமராஜ் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

மகளிர் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் போன்றவை நாளை வெளியாகவுள்ளது. இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ஸ்ம்ருதி மந்தனா, டி இமான், பாண்டிராஜ் மற்றும் அனிருத் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்திற்கு திபு நினன் தாமஸ் என்பவர் இசையமைத்துள்ளார்.

இவருடைய இசையமைப்பில் உருவாகியுள்ள 'வாயாடி பெத்த புள்ள' என்ற பாடலை சிவகார்த்திகேயன், அவருடைய மகள் மற்றும் வைக்கம் விஜயலட்சுமி ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். இதன் மூலம் சிவகார்த்திகேயன் மகளான ஆராதனா தமிழ் சினிமாவிற்கு பாடகராக அறிமுகமாகிறார். இதனால் இந்த படம் சிவகார்த்திகேயன், அருண்ராஜா காமராஜ் ஆகியோருக்கு மட்டுமல்லாமல் சிவகார்த்திகேயன் மகள் ஆராதரனாவுக்கும் முதல் படம்.

வாயாடி பெத்த புள்ள பாடலை பாடிய சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா வாயாடி பெத்த புள்ள பாடலை பாடிய சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா

தன் மகள் ஆராதனாவை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய சிவகார்த்திகேயன்