ads

ஜெயலலிதா வாழ்க்கை கதையாக உருவாகும் மூன்று படங்கள்

ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையில் அனுஷ்கா, நயன்தாரா, த்ரிஷா ஆகியோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையில் அனுஷ்கா, நயன்தாரா, த்ரிஷா ஆகியோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு மூன்று படங்களாக உருவாக உள்ளது. முன்னதாக இயக்குனர் விஜய் மற்றும் இயக்குனர் பிரியதர்ஷினி ஆகியோர் ஜெயலலிதா வாழ்க்கையை உருவாக்க உள்ளதாக அறிவித்தனர். இவர்களை தொடர்ந்து இயக்குனர் பாரதிராஜாவும் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்க முன்வந்துள்ளார். இதில் இயக்குனர் விஜய் இயக்க உள்ள இந்த படத்தை தயாரிப்பாளர் விஷ்ணுவர்தன் இந்தூரி தயாரிக்க உள்ளார்.

இவர் தற்போது என்டிஆர் வாழ்க்கை கதையை உருவாக்கி வருகிறார். இது தவிர 1983இல் இந்திய கிரிக்கெட் அணி வாங்கிய முதல் உலக கோப்பையையும் படமாக உருவாக்கி வருகிறார். இந்த படங்களுக்கு பிறகு ஜெயலலிதா வாழ்க்கையை கையில் எடுத்துள்ளார். இந்த படத்தில் ஜெயலலிதா வேடத்தில் த்ரிஷா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜெயலலிதா பிறந்த நாளில் துவங்க உள்ளது. இவரை தொடர்ந்து பெண் இயக்குனரான பிரியதர்ஷினியும், வரலட்சுமி நடிப்பில் உருவாகி வரும் 'சக்தி' படத்திற்கு பிறகு ஜெயலலிதா வாழ்க்கை கதையை உருவாக்குவதாக அறிவித்திருந்தார்.

இவர் இயக்குனர் மிஷ்கினிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். இந்த படத்தில் ஜெயலலிதா வேடத்திற்கு நயன்தாரா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர்களை தொடர்ந்து இயக்குனர் பாரதிராஜா இயக்க உள்ள இந்த படத்தினை தயாரிப்பாளர் ஆதித்யா பரத்வாஜ் என்பவர் தயாரிக்கிறார். இளையராஜா இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஜெயலலிதா கதாபாத்திரத்திற்கு அனுஸ்கா மற்றும் ஐஸ்வர்யாராய் ஆகியோரிடமும், எம்ஜிஆர் கதாபாத்திரத்திற்கு மோகன்லால் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரிடமும் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

ஜெயலலிதா வாழ்க்கை கதையாக உருவாகும் மூன்று படங்கள்