ads

தூக்கத்தில் மாரடைப்பால் இறந்த தொலைகாட்சி நடிகர் கரண் பரஞ்செபி

தில் மில் கையி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடித்துவரும் கரண் பாரஞ்செபி மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.

தில் மில் கையி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடித்துவரும் கரண் பாரஞ்செபி மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.

இந்தி மொழியில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்படும் 'தில் மில் கையி' என்ற நிகழ்ச்சி ரசிகர்களிடம் வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஆண் செவிலியர் வேடத்தில் ஜிக்னேஸ் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வந்த நடிகர் கரண் பாரஞ்செபி மாரடைப்பால் இறந்துள்ளார். இந்த செய்தியறிந்து ரசிகர்கள் அனைவரும் மிகுந்த வருத்தத்துடன் உள்ளனர்.

கரண் பாரஞ்செபி மும்பையில் வசித்து வருகிறார். இவருக்கு வயது 26. இவருடைய வீட்டில் படுக்கைறையில் பிணமாக இருப்பதை அவரது தயார் கடந்த ஞாயிற்று கிழமை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த சம்பவம் எப்படி நிகழ்ந்தது என்று தெரியவில்லை. ஆனால் கரண் தூக்கத்தில் இருக்கும் போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் அதனால் அவர் இறந்திருக்க கூடும் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இவருடைய இழப்பிற்கு அவருடன் பணிபுரியும் கலைஞர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

தூக்கத்தில் மாரடைப்பால் இறந்த தொலைகாட்சி நடிகர் கரண் பரஞ்செபி