ads

உறுமீன் இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் இந்தியாவின் முதல் நாய்கள் சாகசங்கள் நிறைந்த படம்

இயக்குனர் சக்திவேல் பெருமாள்சாமி இயக்கத்தில் உருவாகவுள்ள அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குனர் சக்திவேல் பெருமாள்சாமி இயக்கத்தில் உருவாகவுள்ள அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குனர் சக்திவேல் பெருமாள்சாமி இயக்கத்தில் கடந்த 2015-இல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் 'உறுமீன்'. இந்த படத்தில் நடிகர் பாபி சிம்ஹா, கலையரசன், ரேஷ்மி மேனன், மனோபாலா, சார்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தின் மூலம் பல படங்களில் எடிட்டராகவும், உதவி இயக்குனராகவும் பணியாற்றிய இயக்குனர் சக்திவேல் பெருமாள்சாமி இயக்குனராக அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து இவருடைய இயக்கத்தில் உருவாகவுள்ள அடுத்த படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தை காக்டெய்ல் சினிமாஸ் மற்றும் யுனைட்டட் பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க உள்ளது. முழுக்க நாய்களின் சாகசங்கள் நிறைந்த படமாக உருவாகவுள்ள இந்த படத்தை இயக்குனர் சக்திவேல் பெருமாள்சாமி எழுதி இயக்குகிறார்.

இந்த படத்திற்காக இவர் 8 மாதங்கள், செல்ல பிராணிகளாக நாய்களை பற்றி பல்வேறு ஆராய்ச்சிகளாய் மேற்கொண்டும், ஏராளமான தகவல்களை சேகரித்தும் இந்த படத்தின் கதையை அமைத்துள்ளார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இதற்கான அறிவிப்பை இயக்குனர் சக்திவேல் பெருமாள்சாமி தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

உறுமீன் இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் இந்தியாவின் முதல் நாய்கள் சாகசங்கள் நிறைந்த படம்