ads

செக்க சிவந்த வானம் படத்தில் விஜய் சேதுபதி ஜோதிகா கதாபாத்திரம்

செக்க சிவந்த வானம் படத்தில் விஜய் சேதுபதி ஜோதிகா கதாபாத்திரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

செக்க சிவந்த வானம் படத்தில் விஜய் சேதுபதி ஜோதிகா கதாபாத்திரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் 'காற்று வெளியிடை' படத்திற்கு பிறகு உருவாகி வரும் 'செக்க சிவந்த வானம்' படத்தின் நடிகர் நடிகைகள் கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பினை படக்குழு வெளியீட்டு வருகிறது. முன்னதாக நடிகர் அரவிந்த் சாமி மற்றும் அருண் விஜய் ஆகியோரின் கதாபாத்திரங்கள் வெளிவந்துள்ளது. இதன்படி இந்த படத்தில் அரவிந் சாமி வரதன் கதாபாத்திரத்திலும், அருண் விஜய் தியாகு கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து விஜய் சேதுபதி மற்றும் ஜோதிகா ஆகியோரின் கதாபாத்திரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மல்டி ஸ்டார் படமான இந்த படத்தில் விஜய் சேதுபதி 'ரசூல்' என்ற கதாபாத்திரத்திலும், ஜோதிகா 'சுமதி' என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வரும் இந்த படம் வரும் செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் இன்று மாலை 5 மணிக்கு சிம்பு கதாபாத்திரம் குறித்த அறிவிப்பினை படக்குழு வெளியிட உள்ளது.

இதற்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்து கொண்டிருக்கின்றனர். லைக்கா ப்ரொடக்சன் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். முழுவதும் விறுவிறுப்பாக பயணிக்கும் கதையாக உருவாகியுள்ள இந்த படத்தில் காதல் சம்பந்தப்பட்ட பாடல்கள் எதுவும் இல்லை என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார். விரைவில் இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் இசை போன்றவை வெளியாகவுள்ளது.

ரசூலாக விஜய் சேதுபதி ரசூலாக விஜய் சேதுபதி
சுமதியாக ஜோதிகா சுமதியாக ஜோதிகா

செக்க சிவந்த வானம் படத்தில் விஜய் சேதுபதி ஜோதிகா கதாபாத்திரம்