ads

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில் அதிமுக எம்பிக்கள் தற்கொலை செய்ய தயார் - நவநீத கிருஷ்ணன்

பிரபல வழக்கறிஞரான நவநீத கிருஷ்னன் மாநிலங்களவையில் அதிமுக எம்பிக்கள் தற்கொலை செய்ய தயாராகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பிரபல வழக்கறிஞரான நவநீத கிருஷ்னன் மாநிலங்களவையில் அதிமுக எம்பிக்கள் தற்கொலை செய்ய தயாராகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பிரபல வழக்கறிஞரான நவநீத கிருஷ்ணன்,சென்னை சட்ட கல்லூரியில் பட்ட படிப்பை முடித்து விட்டு 27 வருடங்களுக்கு மேல் வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார். இவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கில் ஆஜராகியுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு குற்றவியல் கூடுதல் தலைமை வழக்கறிஞர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர், தஞ்சாவூர் ராஜா சரபோஜி அரசு கலைக்கல்லூரியில் பகுதி நேர விரிவுரையாளர் போன்ற பொறுப்புகளில் பணியாற்றியுள்ள இவர் டெல்லி மேல்சபை உறுப்பினர் டிஎம் செல்வகணபதி என்பவர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு வெற்றிடத்தை நிரப்புவதற்காக நடந்த இடைத்தேர்தலில் அதிமுகவை சேர்ந்த நவநீத கிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் தற்போது நடந்த மாநிலங்களவை பொது கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில் அதிமுக எம்பிக்கள் தற்கொலை செய்யவும் தயாராக உள்ளதாக ஆவேசமாக தெரிவித்துள்ளார்.  

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில் அதிமுக எம்பிக்கள் தற்கொலை செய்ய தயார் - நவநீத கிருஷ்ணன்