ads

நெல்லையில் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர் கைது

பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர் கைது. photo credit predragphoto77 / Freepik

பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர் கைது. photo credit predragphoto77 / Freepik

நெல்லையில் அரசு உதவி பெரும் பள்ளி ஒன்றின் ஆசிரியர் தன் வகுப்பில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததாக நெல்லை மாவட்ட போலீசார் அந்த ஆசிரியரை கைது செய்துள்ளனர். 

அந்தோணிசாமீ  என்ற ஆசிரியர் நெல்லை மாவட்டத்திலுள்ள அரசு பள்ளி ஒன்றில் பணியாற்றிவருகிறார். இவர் அப்பள்ளியில் பயிலும் மாணவிகளை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதை தனது கைபேசியில் படம் பிடித்தும் வைத்துள்ளார்.

அந்தோனிசாமியின் இந்த மனிதத்தன்மை இல்லாத குற்றச்செயல் அதே பகுதியை சேர்ந்த செல்போன் கடைக்காரர் ஒருவரால் போலீசுக்கு தெரியவந்துள்ளது.  3 மாதங்களுக்கு முன்னர் அந்தோணிசாமி அவரது கைபேசியை பழுதுபார்ப்பதற்க்காக அந்த கடையை நாடியுள்ளார் கடைக்காரர் அந்தோணிசாமி கொடுத்த கைபேசியை ஆய்வு செய்தபோது அந்தோணிசாமி அவரது வகுப்பில் பயிலும் மாணவிகள் பலரை நிர்வாணமாக படம் எடுத்து வைத்திருப்பதும் பலரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியிருப்பதும் தெரியவந்துள்ளது.

இப்போது நெல்லை மாவட்ட போலீசார் அந்தோனிசாமியை கைதுசெய்து பாளையம்கோட்டை சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவம் பற்றி போலீசார் கூறுகையில் அந்தோணிசாமி இம்மாதிரியான குற்றங்களை மூன்று வருடங்களுக்கும் மேல் செய்து வந்திருக்கிறார் எனவும் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் வழக்கும் பதிவித்திருக்கிறார் எனவும் கூறினர். 

அந்தோணிசாமிக்கு அவர் மனைவி மற்றும் குழந்தையுடன் அதே பகுதியில் வசிக்கிறார் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

நெல்லையில் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர் கைது