ads

நடிகர் வருண் தவான் காவல் துறையினரிடம் மன்னிப்பு

varun dhawan sorry to mumbai police

varun dhawan sorry to mumbai police

இந்தி நடிகர் வருண் தவான் மும்பையை சேர்ந்தவர். இவர் தனது காரில் பயணம் செய்துகொண்டிருக்கும் போது தலையை வெளியே நீட்டியபடி ஆட்டோவில் சென்ற ரசிகையிடம் செல்பி எடுத்துள்ளார். இதனை அந்த வழியில் சென்ற ஒரு நபர் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்ப செய்துள்ளார். தற்போது இந்த புகை படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனை அடுத்து மும்பை போலீசார் நடிகர் வருண் தவானை சமூக வலைத்தளத்தில் எச்சரித்துள்ளார். அதில் "இது போன்ற நடைமுறையற்ற செயலை திரையில் மட்டும் செய்வது நல்லது. சாலையில் வேண்டாம். இந்த செயல் உங்கள் உயிருக்கும் உங்களது ரசிகருக்கு ஆபத்தை விளைவிக்கும்." என எச்சரித்துள்ளார்.

இதனை அடுத்து பதில் அளித்த வருண் தவான் போலீசாரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அதில் "கார் இயங்குநிலையில் இருக்கும்போது செல்பி எடுக்கவில்லை. சிக்னலில் நின்று கொண்டிருக்கும் போதுதான் எடுத்தேன். எனது ரசிகையின் உணர்வை மதிக்க தான் அப்படி செய்தேன். பாதுகாப்பை மனதில் வைத்துக்கொண்டு இது போன்ற செயலில் ஈடுபடமாட்டேன்." என்று மன்னிப்பு கேட்டுள்ளார்.

நடிகர் வருண் தவான் காவல் துறையினரிடம் மன்னிப்பு