ads

கோவிட்19 எதிராக இந்தியா சிறப்பாக செயல்படுகிறது, பிரதமர் மோடியை பாராட்டினார் பில் கேட்ஸ்

பிரதமர் மோடியை பாராட்டினார் பில் கேட்ஸ்

பிரதமர் மோடியை பாராட்டினார் பில் கேட்ஸ்

கொரோனா வைரஸ் எதிராக போராடுவதில் மோடி அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்கு பில்லியனர் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். கோவிட் -19 நோய்த் தொற்றை குறைக்க இந்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அவர் எழுதியது, 

"சமூக தொலைதூரம் மற்றும் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் போன்ற செயல்களால் இந்தியா அனைவரையும் வியக்க வைக்கிறது, மோசமான சூழ்நிலையை கட்டுக்குள் கொண்டுவர சுகாதார அமைப்புகள் மற்றும் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு இந்தியாவிற்கு பக்கபலமாக அமைத்துள்ளது.

மேலும், டிஜிட்டல் தளங்களை பயன்படுத்தும் விதமும், மருந்துகளின் உற்பத்திக்கு, கொரோனா  தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் மாநில அரசுகளுடன் இணைந்து பிரதமர் மோடியின் முயற்சி சிறப்பாக இருக்கிறது" என்று பில் கேட்ஸ் அவர்கள் தெரிவித்துள்ளார். 

பில் கேட்ஸ் மற்றும் இவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் எந்தவொரு அசாதார சூழ்நிலை வந்தாலும், மருத்துவ மேம்பாட்டிற்காக உலக சுகாதார மையத்திற்கு பெருமளவிற்கு நிதி உதவி செய்து வருகின்றனர்.

கோவிட்19 எதிராக இந்தியா சிறப்பாக செயல்படுகிறது, பிரதமர் மோடியை பாராட்டினார் பில் கேட்ஸ்