ads

முதலமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டிய அதே நபரால் ரஜினிகாந்த் வீட்டிலும் பரபரப்பு

கடந்த சனிக்கிழமை இரவு ரஜினிகாந்த் வீட்டிற்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை இரவு ரஜினிகாந்த் வீட்டிற்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

தற்போது சினிமா, அரசியல் பிரபலங்கள் வீட்டிற்கு போலியான வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பிரபலங்கள் என்றாலே ரசிகர்கள் அளவிற்கேற்ப வெறுப்பவர்களும் இருப்பர். ஆனால் பிரபலங்களின் சில செயல்கள் ரசிகர்களை கவர்ந்து வந்தாலும் ஒரு சிலரை வெறுப்படைய செய்கிறது. இதில் ஒரு சிலர் பிரபலங்களின் பிரபலங்களின் மீது இருக்கும் ஆத்திரத்தால் அவர்களின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டுதல்களை விடுத்து வருகின்றனர். இது போன்ற செயல்கள் பொழுதுபோக்குகாகவும் ஒரு சில செயல்கள் உண்மையாகவும் நடந்து விடுகிறது.

தற்போது முகேஷ் அம்பானியின் ஜியோ வந்ததில் இருந்து இது போன்ற செயல்கள் அதிகரித்து வருகின்றன. இது போன்ற செயல்களால் பெரும்பாலும் பாதிக்கப்படுவது காவல் அதிகாரிகள் தான். முன்னதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. உடனே பரபரப்புடன் தீவிரமாக செயல்பட்ட காவல் அதிகாரிகள் மிரட்டல் விடுத்த நபர் கடலூரை சேர்ந்த புவனேஷ் என்பது தெரியவந்தது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. சென்னை காவல் கட்டுப்பாட்டு துறைக்கு வந்த மிரட்டலை வைத்து காவல் அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வந்தனர். விசாரித்ததில் முன்னதாக முதலமைச்சர் வீட்டிற்கு மிரட்டல் விடுத்த அதே நபர் ரஜினிகாந்த் வீட்டிற்கும் மிரட்டல் விடுத்துள்ளது தெரியவந்தது. தற்போது புவனேஷ் என்பவரிடம் காவல் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதலமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டிய அதே நபரால் ரஜினிகாந்த் வீட்டிலும் பரபரப்பு