ads

முதல் அமைச்சர்: சேமிப்பு கிடங்கிற்கு மேலும் ஒரு மாதத்திற்கு வாடகை இல்லை

சேமிப்பு கிடங்கிற்கு மேலும் ஒரு மாதத்திற்கு வாடகை இல்லை

சேமிப்பு கிடங்கிற்கு மேலும் ஒரு மாதத்திற்கு வாடகை இல்லை

தமிழகத்தில் கொரோனா தாக்குதலைக் கட்டுப்படுத்திட தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, இதில் முக்கிய பங்கு வகிக்கும் விளைபொருட்களின் சேமிப்பு கிடங்கிற்கு மேலும் வாடகை இல்லாமல் நீட்டிப்பு, இதன் விவரம்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் புதிய அறிக்கையில், விளைபொருட்களை சேமித்து வைத்திருந்த பாதுகாப்பு கிடங்களுக்கு 30 நாட்களுக்கு வாடகை செலுத்த தேவையில்லை என்று அறிவிப்பு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் விவசாயிகளின் சிரமங்களை ஊரடங்கு காலத்திலும் மற்றும் அதற்கு பின்வரும் காலத்திலும் தவிர்க்க மேலும் ஒரு மாத காலத்திற்கு வாடகை செலுத்த தேவையில்லை. விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

முதல் அமைச்சர்: சேமிப்பு கிடங்கிற்கு மேலும் ஒரு மாதத்திற்கு வாடகை இல்லை