ads

நெல்லையில் தனியார் கல்லூரி மாணவர் மனோஜ் பிரபாகர் தற்கொலை

திருநெல்வேலியில் தனியார் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

திருநெல்வேலியில் தனியார் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்போது தனியார் கல்லூரிகளில் பயின்று வரும் மாணவ, மாணவியர்கள் தற்கொலை செய்வது வழக்கமாகி விட்டது. ஆனால் இதுபோன்ற மாணவர்களின் தற்கொலைகளில் மர்மங்கள் மூடி மறைக்கப்படுகின்றன. கல்லூரியில் பயில மாணவர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து, விடுதிகளில் தங்கி பயின்று வருகின்றனர். ஆனால் கல்லூரிகளிலும், விடுதிகளிலும் அவர்களுக்கு நேரும் துன்பத்தாலும், தொந்தரவுகளாலும் அவர்களை தற்கொலை செய்ய தூண்டுகிறது.

இதற்கு பெரும்பாலும் கல்லூரிகளில் மாணவர்களிடம் நிர்வாகம் வாங்கும் அதிகப்படியான கட்டணங்களே காரணாமாக அமைகிறது. தற்போது நெல்லையில், தனியார் கல்லூரியை சேர்ந்த மனோஜ் பிரபாகர் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரின் தற்கொலை முடிவிற்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை. ஆனால் கல்லூரி நிர்வாகம் அதிகப்படியான கட்டணம் கேட்டதால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த சம்பவம் தற்போது அப்பகுதி மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லையில் தனியார் கல்லூரி மாணவர் மனோஜ் பிரபாகர் தற்கொலை