ads

ஒரு வாரத்தில் அடுத்தடுத்து இரண்டு காவல் அதிகாரிகள் தற்கொலை

ஒரே வாரத்தில் சென்னையில் இரண்டு காவல் அதிகாரிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

ஒரே வாரத்தில் சென்னையில் இரண்டு காவல் அதிகாரிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

சென்னை அயனாவரத்தை சேர்ந்த காவல் அதிகாரி சதீஸ்குமார் என்பவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு வயது 28. எஸ்ஐ ஆன இவர் தஞ்சை மாவட்டம் மேலூர் கிராமத்தை சேர்ந்தவர். இவர் பயிற்சியில் இருந்த போதே தனது உயர் அதிகாரிகளால் எஸ்ஐக்கு பணியமர்த்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இரவில் சென்னை காவல் நிலையத்திலே பணியில் இருக்கும் போது தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துள்ளார். இவருடைய உடலுக்கு அருகில் கடிதம் ஒன்று இருந்துள்ளது. இதில் தனது சாவுக்கு யாரும் காரணமில்லை என்று குறிப்பிட பட்டுள்ளது. தகவல் அறிந்து விரைந்து வந்த உயர் அதிகாரிகள் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ள விடியோவை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த காட்சியில் எஸ்ஐ சிரஞ்சீவியிடம் சாவி வாங்கி துப்பாக்கியால் சுட்டு கொண்டது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து தற்போது எஸ்ஐ சிரஞ்சீவியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த காவல் அதிகாரி சதீஸ்குமார் உடல் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பட்டுள்ளது. இது இந்த வாரத்தில் நடக்கும் இரண்டாவது சம்பவமாகும்.

முன்னதாக ஆயுத படைப்பிரிவை சேர்ந்த அருண்ராஜ் என்பவர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த ஜெயலலிதா சமாதியின் முன்பு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலை செய்து கொண்ட இருவருக்கும் திருமணம் ஆகவில்லை. இந்த சம்பவங்கள் குறித்து கமிஷனர் விஸ்வநாதன் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து வருகிறார்.

ஒரு வாரத்தில் அடுத்தடுத்து இரண்டு காவல் அதிகாரிகள் தற்கொலை