ads

மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவன் கைது

வடபழனி அர்ச்சகர் மனைவி கொலை வழக்கில், நாடகமாடிய கணவர் பாலகணேஷ் கைது.

வடபழனி அர்ச்சகர் மனைவி கொலை வழக்கில், நாடகமாடிய கணவர் பாலகணேஷ் கைது.

சென்னையில் வடபழனி சிவன் கோவிலில் அர்ச்சகராக பணிபுரிந்து வருகிறார் பாலகணேஷ். இவருடைய மனைவி ஞானப்பிரியா காஞ்சிபுரத்தை சேர்ந்தவர். இந்நிலையில் கடந்த 5-ஆம் தேதி பாலகணேஷ் கழிவறையில் கழுத்து மற்றும் கைகள் கட்டப்பட்ட நிலையில் மயக்க நிலையில் இருந்துள்ளார். இவருடைய மனைவி ஞானப்பிரியா கைகள் கட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

தகவல் அறிந்து வந்த போலீசார் இது குறித்த வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பாலகணேஷ் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருந்தார். அவருக்கு மயக்கம் தெரிந்தவுடன் அவரிடம் விசாரணை நடத்தியபோது இரவில் மர்ம நபர்கள் என்னை தாக்கிவிட்டு வீட்டின் உள்ளே இருந்த தன் மனைவியின் 15 பவுன் நகைகளை பறித்து சென்றதாகவும் வாக்குமூலம் அளித்தார்.

இதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. ஆனால் பாலகணேஷ் கூறியது போல் இருவர் வந்ததுக்கான அடையாளங்கள் எந்த கேமிராவிலும் பதிவாகவில்லை. மேலும் நகை பறிக்க வந்தவர்கள் இவரை மட்டும் உயிரோடு விட்டு, அவரது மனைவியை மட்டும் ஏன் கொலை செய்து பாதி நகைகளை மட்டும் பறித்து செல்ல வேண்டும். என்பது போன்ற சந்தேகங்கள் பாலகணேசுக்கு எதிராக திரும்பியது.

இதனால் ஞானப்பிரியாவை அவரது கணவரே கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் விசாரித்த போது அவர், ஞானப்பிரியவை தன் நண்பருடன் சேர்ந்து கொலை செய்ததாக குற்றத்தை ஒப்பு கொண்டார். இதனை அடுத்து, தன்னுடைய மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவர் பாலகணேசை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நாடகம் நடத்த 15 பவுன் நகைகளை தன்னுடைய நண்பர் வீட்டில் பதுக்கி வைத்து, மர்ம நபர்கள் மீது பலி சுமத்தியதும் அம்பலமாகியுள்ளது.

மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவன் கைது