ads

அம்பலமானது ராமர்பிள்ளையின் மூலிகை பெட்ரோல் ரகசியம்

அம்பலமானது ராமர்பிள்ளையின் மூலிகை பெட்ரோல் ரகசியம்

அம்பலமானது ராமர்பிள்ளையின் மூலிகை பெட்ரோல் ரகசியம்

சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவும் வதந்திகளுள் ஒன்று மூலிகை பெட்ரோல். தற்போது உலகமே பெட்ரோல் மற்றும் டீசலை நம்பி தான் உள்ளது. அதை நம்பி தான் அரசாங்கத்தின் வருமானமும் உள்ளது. இந்த நிலைமையில் தான் தமிழகத்தில் ராஜபாளையத்தை சேர்ந்த ராமர் பிள்ளை என்பவரின் மூலிகை பெட்ரோல் வதந்திகள் பரவி வருகின்றன. இவர் 1996ஆம் ஆண்டில் மூலிகை பெட்ரோல் கண்டுபிடித்ததாக தெரிவித்திருந்தார்.

இதனால் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி அவரை பாராட்டி அவருக்கு மூலிகை பெட்ரோலை தயாரிக்க நிலம் மற்றும் இதர வசதிகளை செய்து தருவதாக தெரிவித்திருந்தார். ஆனால் இவர் மூலிகை பெட்ரோல் என்ற பெயரில் மக்களிடம் 2.42 கோடி ஏமாற்றியதாக சிபிஐ இவரை கைது செய்து சிறையில் அடைத்தது. சிறையை விட்டு வெளியே வந்ததும் கடந்த ஆகஸ்ட் 15இல் தன்னுடைய மூலிகை பெட்ரோலை அமலுக்கு கொண்டு வருவதாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இவரிடம் அதற்கான லைசன்ஸ் இல்லை என்பதால் மீண்டும் இவர் பெயரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இப்படி ஒரு புறம் இருக்க, மறுபுறம் ஒரு தமிழனின் கண்டுபிடிக்க மட்டம் தட்டுவதாக இவருக்கு ஏராளமானோர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த வதந்திகளுக்கெல்லாம் முடிவு கட்டும் விதமாக யூடியூப் சேனல் ராமர் பிள்ளை தனது மூலிகை பெட்ரோலை தயாரிக்கும் முறையில் மோசடி செய்துள்ளதை ஆதாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

முதல் நாள் சோதனையில், ராமர் பிள்ளை உண்மையாக மூலிகை பெட்ரோல் தயாரிப்பதாக அசந்து போன அவர்கள், பதிவு செய்திருந்த விடியோவை எடிட்டிங் செய்யும் போது அவர் ஏமாற்றியிருப்பதை கண்டறிந்தனர். இதன் பிறகு அவர் ஏமாற்றுவதை நிரூபிக்க இரண்டு நாட்கள் சோதனை நடத்தியுள்ளனர். இந்த சோதனை மூலம் ராமர் பிள்ளை, மூலிகை பெட்ரோலை தயாரிக்க ஏதோ ஏமாற்று வேலை செய்கிறார் என்பதை மட்டும் ஆதாரபூர்வமாக கண்டுபிடித்துள்ளனர். இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது இவர் ஏமாற்றியிருப்பது தெரிய வந்திருந்தாலும் ஒரு தமிழனின் கண்டுபிடிப்பை மெய்யாக்க தொடர்ந்து அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

video Credits - Let's Make Engineering Simple (YouTube)

video Credits - Let's Make Engineering Simple (YouTube)

அம்பலமானது ராமர்பிள்ளையின் மூலிகை பெட்ரோல் ரகசியம்