ads

அதிகாலை 4 மணிக்கு கலைஞர் நினைவிடத்தில் நடிகர் விஜய் அஞ்சலி

சர்கார் படப்பிடிப்பை முடித்த கையோடு நடிகர் விஜய் வீட்டிற்கு செல்லாமல் அதிகாலை 4 மணிக்கு கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

சர்கார் படப்பிடிப்பை முடித்த கையோடு நடிகர் விஜய் வீட்டிற்கு செல்லாமல் அதிகாலை 4 மணிக்கு கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

முன்னாள் திமுக தலைவர் திரு கருணாநிதி இறந்து இன்றுடன் ஆறாவது நாளை கடக்கிறது. அவரது நினைவிடத்தில் தற்போது வரையிலும் பொது மக்களும், பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தற்போது நடிகர் விஜய், அதிகாலை 4 மணிக்கு கலைஞர் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

கலைஞர் கருணாநிதி இறந்தபோது அமெரிக்காவில் சர்கார் படப்பிடிப்பில் பிசியாக இருந்ததால் அவரால் உடனடியாக சென்னைக்கு வந்து கலைஞரின் இரங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை. ஆனால் தற்போது அமெரிக்காவில் நடைபெற்று வந்த இயக்குனர் ஏஆர் முருகதாஸின் சர்கார் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை அடுத்து 22 மணிநேரம் பயணம் செய்து சென்னையை அடைந்து வீட்டிற்கு செல்லாமல் கலைஞர் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். இது குறித்த வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 

அதிகாலை 4 மணிக்கு கலைஞர் நினைவிடத்தில் நடிகர் விஜய் அஞ்சலி