ads

விருதுநகரில் வாலிப இளைஞன் கழுத்தறுத்து கொலை - 7 பேர் கைது

virudhunagar murder issue

virudhunagar murder issue

தமிழ் நாட்டில் பல விதமாக கொலை, கொள்ளை, தற்கொலை என பலவும் நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கந்து வட்டி தொல்லை காரணத்தினால் தற்கொலைகள் நடைபெற்று வந்ததினை தொடர்ந்து தற்பொழுது முன்விரோதம் காரணத்தினால் கொலைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக விருதுநகர் மாவட்டத்தில் 25 வயது உள்பட்ட ஒரு இளைஞன் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்து அந்த சடலத்தை கண்மாய் பகுதியில்  கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. 

இந்த அதிர்ச்சியான தகவல் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே வடக்குமடை கிராமத்தில் நடைபெற்றது. இது குறித்து காவல் துறை அதிகாரிகள் மூன்று தனிப்படைகளை கொண்டு விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் இறந்து கிடந்த வாலிப இளைஞன் மதுரை சிம்மக்கலை சேர்ந்த செல்லபாண்டி என்றும், இந்த நபர் மீது காவல் ஆணையத்தில்  திருட்டு வழக்கு பதிவு செய்து இருப்பதும் தெரியவந்தது. 

மேலும் இந்த விசாரணையில் கொலை செய்த நபர்களையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இறந்து போன செல்லபாண்டியின் நண்பர் கார்த்தி அதே பகுதியை சேர்ந்தவர். இவர்களுக்குள் சில காலங்களாக முன்விரோதம் இருந்ததால் கார்த்தி தனது நண்பர்களை சேர்த்து கொண்டு செல்லப்பாண்டியை கடத்தி சென்று கோரமான செயலில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது. அதனை அடுத்து கார்த்தி மட்டும் அவரின் நண்பர்கள் உள்பட 7 பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

விருதுநகரில் வாலிப இளைஞன் கழுத்தறுத்து கொலை - 7 பேர் கைது